தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் பராமரிப்புப் பிரிவு, சென்னையை அடுத்த ஆவடி, திருச்சியில் காவல் போக்குவரத்துப் பட்டறை-பயிற்சிப் பள்ளி ஆகிய இடங்களில் தானியங்கி பொறியாளர் காலியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடந்தது.
அதில், 109 தேர்வர்கள் பங்கேற்றனர். ஏற்கெனவே மூன்று கட்ட சான்றிதழ் சரிபார்ப்புகள் முடிவடைந்த நிலையில், நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 28-இல் நடைபெறுகிறது.
அதில், தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட 7 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் http://www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment