Wednesday, May 9, 2018

நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. சேர்க்கை: இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க அரசு உத்தரவு

Image result for karaikudi alagappa college


பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பி.இ. சேர்க்கையை போன்றே நேரடி இரண்டாமாண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கும் இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டுமென தனது அறிவிப்பில் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு விவரம்:-

தகுதிவாய்ந்த பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்ற டிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி. பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டு பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதி படைத்தவர்கள். தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் சேர்க்கை பெற விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இரண்டாமாண்டு பொறியியல் படிப்புக்கு, விண்ணப்பிக்க மூன்று இணையதளங்கள் (www.accet.co.in www.accet.edu.in www.accetlea.com) அளிக்கப்பட்டுள்ளன. ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கு, விண்ணப்பதாரர் தேவையான சான்றுகளுடன் நேரடியாக ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த பிறகு அதை பிரதி எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.

மே 18-இல் தொடக்கம்:

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நடைமுறைகள் மே 18-இல் தொடங்கும். ஜூன் 14-இல் பதிவு நடைமுறைகள் நிறைவடையும். விண்ணப்பதாரர்கள் ரூ.300-க்கான வரைவோலையை "The secretary,
Second year B.E., B.Tech Degree Admissions- 2018-19,
ACGCET, Karaikudi" payable at Karaikudi' 2018-19,

என்ற பெயரில் பெற்று பதிவுக் கட்டணமாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பதிவுக் கட்டணமின்றி செலுத்தப்படும் விண்ணப்பங்கள் காரணமின்றி நிராகரிக்கப்படும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவர்களுக்கு பதிவுக் கட்டணம் இல்லை. அதேசமயம், விண்ணப்பதாரர்கள் சுய சான்றொப்பமிட்ட ஜாதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, ''செயலாளர், நேரடி இரண்டாமாண்டு பி.இ.-பி.டெக்., சேர்க்கை, அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, காரைக்குடி-630 004'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 பிழைகள்



மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 மொழி பெயர்ப்புப் பிழைகள் இருந்ததாக தன்னார்வ தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வரும் டெக் பார் ஆல் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டில், 180 வினாக்கள் கொண்ட நீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த பிழைகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

உதாரணமாக, நீட் தேர்வுக்கான வினாத்தாளில் 75வது வினாவில் Cheetah (தமிழில் சிறுத்தை) என்ற வார்த்தைக்கு பதிலாக சீதா என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதே போல 77வது வினாவில் வரும் ஒரு ஆங்கில வார்த்தையும் தவறான அர்த்தத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

இதே போல 49 மொழி பெயர்ப்புப் பிழைகள் கொடுக்கப்பட்டிருப்பதால், தமிழில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 49 வினாக்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டால், தமிழில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு 196 மதிப்பெண்கள் சலுகை மதிப்பெண்களாகக் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு என்ன காரணம் என்பதையும் அவர்களே விளக்கியும் உள்ளனர். அதாவது, என்சிஇஆர்டி புத்தகங்கள் தமிழில் இல்லாததும், ஆங்கிலத்தின் மிக நுணுக்கமான வார்த்தைகளை தமிழில் மொழி பெயர்க்க சிபிஎஸ்இ நிர்வாகம் தவறியதுமே காரணம் என தெரிவித்துள்ளனர்.

இதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் என்ன பதில் சொல்லப் போகிறது என்று இதுவரை புரியாத புதிராக இருக்கிறது.

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து நீட் தேர்வில் பங்கேற்ற 24 ஆயிரம் மாணவ, மாணவிகள் தமிழில் நீட் தேர்வெழுதியது குறிப்பிடத்தக்கது.

மே14-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சி


மாற்றுத் திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் தொடர்பான இலவச பயிற்சி மே 14-ஆம் தேதி சென்னை கிண்டியில் நடைபெறுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் சென்னைப் பிரிவு சார்பில், குறுகியகால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. உடல்திறன் குறைபாடு உள்ளவர்கள்  மற்றும் கேட்கும் திறனற்றவர்களுக்கு செல்லிடப்பேசி பழுதுபார்த்தல், தையல் கலை, வீட்டு உபகரணங்கள், ஸ்கிரீன் பிரிண்டிங், புக்  பைண்டிங், சில்லறை விற்பனைப் பிரிவு ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.  

செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சி: செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சிக்கு உடல் குறைபாடு உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 15 முதல் 35 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு இந்த பயிற்சி வரும் 14-ஆம் தேதி அளிக்கப்படும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ., பட்டயப் படிப்பு படித்தவர்கள் இதில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சி சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தில் நடைபெறும்.

மே 17-இல் சில்லறை விற்பனைப் பிரிவு பயிற்சி: சில்லறை விற்பனைப் பிரிவுப் பயிற்சியில் மாற்றுத் திறனாளிகளும், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை. 8- ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம். 

இவர்கள் மே 17-ஆம் தேதி சாந்தோம் ஹெல்ப் டிரஸ்ட் அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கலாம். குறைந்த அளவு இடங்கள் மற்றும் விடுதி வசதி உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் மே 14-க்கு முன்பாக மையத்தை அணுகலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ESAF நிதி வங்கியில் 3 ஆயிரம் அதிகாரிகள் வேலை


Image result for esaf 2018

கேரள மாநிலம் திரிச்சூரில் உள்ள மண்ணுதியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இஎஸ்ஏஎஃப் (ESAF) சிறிய நிதி வங்கியில் நிரப்பப்பட உள்ள 3 ஆயிரம் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 3000

பணியிடம்: கேரளா

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Branch heads - 220
2. Assistant branch heads - 220
3. Sales officers/Retail Assets & Liability - 1500
4. Relationship officer - 400
5. Credit Officer - 100
6. Sales Officer - Trainee - 560

வயதுவரம்பு: 30.04.2018 தேதியின்படி 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்று குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.esafbank.com எனற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2018

விவரங்கள் அறிய Click Here

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் வேலை!


Image result for TMB BANK

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட உள்ள தலைமை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் விவரம் வெளியிடப்படவில்லை. 

பணி: மேலாளர் 

சம்பளம்: மாதம் ரூ.1,40,000 

வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: உதவி பொது மேலாளர் 

தகுதி: மேலாண்மை, வணிகவியல், கணினி அறிவியல், ஐடி போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர் நிலையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.1,25,000 

வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Managing Director & CEO, 
Tamilnad Mercantile Bank Ltd Head Office, # 57, 
V. E. Road Thoothukudi 628 002. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.05.2018 

விவரங்கள் அறிய Click Here

இக்னோவில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 30



இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.

படிப்புகள்: ஏராளமான பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள்.

தகுதி: ஒவ்வொரு படிப்பிற்கென தனிப்பட்ட தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகையால் விண்ணப்பிப்பதற்கு முன்பு தேர்வு செய்ய விரும்பும் படிப்பிற்கு தேவைப்படும் தகுதி விபரங்கள், இக்னோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்து தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.

சேர்க்கை முறை: 150க்கும் அதிகமான படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றிற்கு, ஆன்லைன் அல்லது @நரடியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 30

விபரங்களுக்கு: www.ignou.ac.in

பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைனில் கலந்தாய்வு: உயர் நீதிமன்றம் சரமாரிக் கேள்வி


Image result for ஆன்லைனில் கலந்தாய்வு

பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளது.

பொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு நடைபெறுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை எப்படி செலுத்த முடியும்? வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க வேறு வழி இருக்கிறதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும், விண்ணப்பக் கட்டணத்தை ரொக்கம் அல்லது டிடி அல்லது பே ஆர்டர் மூலம் செலுத்த இயலுமா என்பது குறித்தும், பழைய விண்ணப்ப முறையில் இந்த முறையும் விண்ணப்பிக்க முடியுமா என்பது குறித்தும் நாளை அண்ணா பல்கலைக்கழகம் பதில் தரவும் உத்தரவிட்டுள்ளது.

அதோடு, ஆன்லைன் விண்ணப்பப் படிவம் ஆங்கிலத்தில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, ஆங்கிலம் தெரியாதவர்கள் பி.இ.க்கு விண்ணப்பிக்க முடியாதா? என்று கேட்டனர்.

3 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், தமிழக அரசின் உதவி மையங்களில் விண்ணப்பிக்கலாம். பொறியியல் கலந்தாய்வுக்காக மாணவர்களும், பெற்றோரும் சென்னை வர வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறப்பட்டது.

கல்லூரியை மாற்றுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, ஆன்லைன் கலந்தாய்வில் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்த மாணவ, மாணவிகள் அதனை 3 நாட்களில் மாற்றிக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது என்று அண்ணா பல்கலை பதில் அளித்தது.

தேர்வு செய்த பொறியியல் கல்லூரியை மாற்ற முதலில் 3 நிமிடம் மட்டுமே அவகாசம் இருந்த நிலையில் தற்போது 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Information and Public Relations Department Recruitment for Junior Photographer Job Posts

TIPRD

Capgemini India Pvt Ltd Chennai Recruitment 2018

Related image

Company Name: Capgemini India Pvt Ltd

Qualification : Bachelor’s degree or equivalent

Experience :  Fresher

Apply Mode :  Online

Name of the Post : Reporting & Analysis Associate

Job Role :  Private Job

Location: Chennai

Apply Job -> Click Here

Ashok Leyland Recruitment for Various Job Post

Image result for Ashok Leyland logo

Org Name: Ashok Leyland

Job Location TamilNadu/ All over India

Job type Private

Name of the Job Posting:
  • Parts Procurement Job Post
  • Electronics Engineer Job Post
  • Divisional Manager – Civil Job Post
  • Senior Team Leader – Internal Audit Job Post
  • Area Executive- Aurangaband Job Post
  • Financial Controller – CSB Job Post
  • Lead-Analytics Job Post
  • Area Parts Manager Job Post
Eligibility: Graduate in any Discipline

Salary:  Best in Industry

Experience: Depends on the job Post

Applying Method: Online Only

How to apply Ashok Leyland job Recruitment: 

Step:1

p1

Step:2

p2

Step:3

p3

Apply This Job-> Click Here