Saturday, May 11, 2019

நெய்வேலியில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்!

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் க்கான பட முடிவு

படிப்புக்கு ஏற்ற வேலை தேடும் பட்டதாரிகளையும், கிடைத்த வேலைக்கு போகும் பட்டதாரிகளையும் நாம் நிறய பேரை பார்த்திருப்போம். ஆனால், 10ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும், முதுநிலைப் பட்டம் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ராணுவத்தில் சேர ஓர் அரிய வாய்ப்பு. 

பாதுகாப்புத் துறை ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளபடி கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள பாரதி விளையாட்டு அரங்கில் இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் வருகிற ஜூன் மாதம் 7-ம் தேதியிலிருந்து 17-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த முகாமில் சென்னை, கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடன், புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளலாம்.

இதில் தொழில்நுட்பம், விமான தொழில்நுட்பம், வெடிகுண்டு பரிசோதகர், நர்சிங் உதவியாளர், பொதுப்பணி, எழுத்தர், ஸ்டோர் கீப்பர் டெக்னீசியன், டிரேட்ஸ்மென் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8,10,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. சில பணிகளுக்கு பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதள பதிவு மே 18-ம் தேதி வரை பதிவு செய்யலாம். விண்ணப்பதாரர்கள் மே மாதம் 21-ம் தேதி மேற்கண்ட இணையதளத்திலிருந்து தங்களுடைய அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதேபோன்று ஆட்சேர்ப்பு முகாமிற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்கள் அனுமதி சீட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும். ஆள்சேர்ப்பு செயல்முறை முழுமையாக தானியங்கி மற்றும் வெளிப்படையானது. கடின உழைப்பு, தயாரிப்பு மட்டுமே தகுதியாக தேர்வு செய்வதை உறுதி செய்கிறது. போலி முகவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்பதையும் அந்தச் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இசை, நடன டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பம் வரவேற்பு

இசை, நடன டிப்ளமோ படிப்பு க்கான பட முடிவு

பரதநாட்டியம், கர்னாடக இசை யில் டிப்ளமோ படிக்க, பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்க லாம் என்று கலாஷேத்ரா கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை திருவான்மியூரில் இயங்கி வருகிறது கலாஷேத்ரா அறக்கட்டளை கல்வி நிறுவனம். இது மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இங்கு பரதநாட்டியம், கர்னாடக இசை (வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம்) மற்றும் விஷுவல் ஆர்ட்ஸ் பாடங்களில் 4 ஆண்டு கால முழுநேர டிப்ளமோ படிப்பு கள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்தவர்கள் இதில் சேரலாம். 2019-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. இப்படிப்புகளில் சேர விரும்புவோர் ஆன்லைனில் (www.kalakshetra.in/admissions) மே 31-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும் என்று கலா ஷேத்ரா அறிவித்துள்ளது.

TLX Tech Solutions Off Campus 2019

TLX Tech Solutions க்கான பட முடிவு

Company Name: TLX Tech Solutions

Post Name: Various Posts

Skills required:
Basic knowledge on C, C++
Basic knowledge in SQL (Data Base)
Knowledge in handling data
Good communication skills
Strong attitude
Knowledge in MS Office(Excel)
Versatile

Qualification: B.E/B.Tech (CS & IT), MCA & M.Sc Computer

Experience: Fresher’s (2019 Batch)

Job Location: Coimbatore

Walk in Date: 16th May 2019 Walk in Time: 09.00 AM

College Address and Venue:
Karpagam College of Engineering, Coimbatore

Registration Link: Click Here

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் கம்பியூட்டர் ஆப்ரேட்டர் வேலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.



திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் புதியதாக உருவாகியுள்ள 45 கம்பியூட்டர் ஆப்ரேட்டர் (தற்காலிக பணி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 45

பணி: Computer Operator

தகுதி: Computer Science, Computer Application போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கம்பியூட்டர் அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு ஆணை மற்றும் விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ. 20,600 - 65,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/tirunelveli என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்டு தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி - 627 002

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.05.2019

விவரங்கள் அறிய Click Here

சட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியீடு: 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு மே 16 முதல் விண்ணப்ப விநியோகம்

சட்டப் படிப்புகள் க்கான பட முடிவு

இளநிலை சட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 12 சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த இளநிலை படிப்புகள் மற்றும் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கான மூன்றாண்டு சட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
 
இப்போது 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஐந்தாண்டு படிப்புகளைப் பொருத்தவரை பி.ஏ.-எல்.எல்.பி., பி.காம்.-எல்.எல்.பி., பி.பி.ஏ.-எல்.எல்.பி., பிசிஏ-எல்.எல்.பி. ஆகிய நான்கு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் மே 16-ஆம் தேதி முதல் நேரிலும், தபால் மூலமும் விநியோகிக்கப்படும்.  விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000. தபால் மூலம் பெற கூடுதலாக ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 31 கடைசி நாளாகும்.

அதுபோல மூன்றாண்டு எல்.எல்.பி. படிப்புக்கான விண்ணப்பம் ஜூன் 28 முதல் விநியோகிக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூலை 26 கடைசி நாளாகும்.

கட்டணம் எவ்வளவு: சீர்மிகு சிறப்புப் பள்ளியில் வழங்கப்படும் ஹானர்ஸ் படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ. 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
12 இணைப்புக் கல்லூரி படிப்புகளில் சேர்க்கை பெறுதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ. 250 ஆகும்.

தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் கூடுதலாக ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தை (www.tndalu.ac.in) பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.