Saturday, May 25, 2019

தமிழ்ச் சுவடியியல் பயிற்சி!!



நண்பர்களே வணக்கம், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்த் துறையில் நடைபெறும் தமிழ்ச் சுவடியியல் பயிலரங்கில் கலந்து கொண்டு பயிற்சி பெற விழைவோர் விண்ணப்பம் செய்யலாம், ( பயிற்சி நாள் 15-06-19 முதல் 05-0719 வரை, நேரம் காலை 10-30 முதல் மாலை 05-00 மணி வரை, )


\

ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி வேலை: பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி வேலை க்கான பட முடிவு

இந்திய ராணுவத்தில் 42-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (டி.இ.எஸ்-42, ஜன 2020) பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணியில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு பிளஸ் டூ முடித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக்கின்றன. இதில் நுழைவுத் திட்டத்தின்படி சேர்பவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். 

மொத்த காலியிடங்கள்: 90 

பயிற்சி: 42-வது தொழில்நுட்ப நுழைவுத் திட்டத்தில் (டி.இ.எஸ்-42, ஜன 2020)

தகுதி: இயற்பியல், வேதியியல், கணதவியல் பாடங்கள் கொண்ட பிரிவில் 70 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ (10+2 முறையில் படித்து) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 16½ வயது முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 01.07.2000 மற்றும் 01.7.2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்களே.

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்.எஸ்.பி நடத்தும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வானது முதல் நிலை, இரண்டாம் நிலை என இருநிலைகளில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல் தகுதி மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.06.2019 

விவரங்கள் அறிய Click Here


சென்னை உயர்நீதிமன்றத்தில் தோட்டக்காரர் வேலை



சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள 24 தோட்டக்காரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: தோட்டக்காரர் (Gardener) 

காலியிடங்கள்: 24

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பிசி, எம்பிசி, டிசி, பிசிஎம் பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2019

விவரங்கள் அறிய Click Here

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை



சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ள 30 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூன் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: ஓட்டுநர்

காலியிடங்கள்: 30

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பிசி, எம்பிசி, டிசி, பிசிஎம் பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.06.2019

விவரங்கள் அறிய Click Here