Sunday, January 6, 2019

ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு!

ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் க்கான பட முடிவு

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (ஆர்ஆர்பி) ரயில்வேத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 13,487

பணி மற்றும் பணியிடம்:-
இளநிலை பொறியாளர் : 12844
இளநிலை பொறியாளர் : (தகவல் தொழில்நுட்பம்) 29
டிப்போட் பொருட்கள் கண்காணிப்பாளர் : 227
இரசாயன மற்றும் மெட்டாலர்ஜிகல் உதவியாளர் : 387

தமிழகத்திற்கான காலியிடங்கள் : 1183

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே கல்வித் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இதற்கான முழுத் தகவல் உள்ளது.

வயது வரம்பு : 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பக் கட்டணம் :-
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2019 ஜனவரி 02 முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 31

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here

விண்ணப்பப் படிவம் பெற : Click Here

TNPSC Group 1 தேர்வு அறிவிப்பு

தொடர்புடைய படம்

நிர்வாகம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 

காலிப் பணியிடம் : 139

பணி மற்றும் காலிப் பணியிடம் :-
உடல் பயிற்சி அதிகாரி - 06
மாவட்ட அதிகாரி - 02
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி - 08
உதவி இயக்குநர் - 15
மாவட்ட பதிவாளர் - 07
உதவி ஆணையாளர் - 11
துணை கண்காணிப்பாளர் - 56
துணை ஆட்சியாளர் - 27
துணை பதிவாளர் - 13

கல்வித் தகுதி:-
உடற்கல்வி பிரிவில் டிப்ளமோ.,ஏதேனும் ஓர் துறையில் பட்டம்

வயது வரம்பு :
21 முதல் 38 வயது வரை

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக www.tnpsc.gov.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150

தேர்வுக் கட்டணம் : ரூ.150

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 31

விபரங்களை அறிய Click Here

Perambalur District Court Recruitment 2019 (62 Office Assistant Posts)

Perambalur District Court க்கான பட முடிவு

Organization Name:
Perambalur District Court
Job Category:
Tamilnadu Govt Jobs
No. of Posts:
62 Vacancies
Name of the Posts:
Office Assistant, Computer Operator, Examiner, Reader, Senior Bailiff, Driver & Various Posts
Job Location:
Perambalur
Selection Procedure:
Written Exam, Interview
Application Apply Mode:
Online
Official Website:
Starting Date:
28.12.2018
Last Date:
21.01.2019
Perambalur District Court Official Notification & Application Link:
Official Website Career Page
Notification & Application Form PDF

காவல்துறை சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு!


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகைப் பிரிவு) பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

காவல்துறை சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வானது கடந்த டிசம்பர் மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்வு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மையங்களில் நடைபெற்றது. இதில், 22 ஆம் தேதி நடந்த காவல் துறையை சேர்ந்தவர்களுக்கான எழுத்துத் தேர்வில் 2,608 பேரும், 23 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பொதுத்தேர்வர்களுக்கான எழுத்துத் தேர்வில் 34,933 பேரும் தேர்வு எழுதினர்.

இந்தத் தேர்வின் முடிவுகள் www.tnusrbonline.org என்ற இணையத்தளத்தில்  (ஜன.5) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மேற்கண்ட இணையதள முகவரியில் சென்று தேர்வாளர்கள் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு: வரும் 21 முதல் நேர்முகத் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப் 1 தேர்வு: க்கான பட முடிவு

குரூப் 1 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கடைசி கட்டத் தேர்வான நேர்முகத் தேர்வு வரும் 21-இல் தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

குரூப் 1-இல் காலியாக இருந்த 85 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 9-இல் வெளியிடப்பட்டது. முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற 176 பேரின் பட்டியல் கடந்த 31-இல் வெளியிடப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, முதன்மை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வானது சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 21-ஆம் தேதி முதல் வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பான தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேர்முகத்தேர்வுக்கான தகவலை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்யலாம். 

விண்ணப்பதாரர்கள் அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நாளில் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்து கொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது. நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும், முழுத் தகுதி பெற உறுதி அளிக்கப்பட்டதாகவும் கருத இயலாது.