Tuesday, June 4, 2019

தமிழக அரசு துறைகளில் ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு



தமிழக அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள 475 பொறியியல் பணியிடங்களுக்கான ‘ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு’ -க்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 475

பணி: Assistant Electrical Inspector 
பணி: Assistant Engineer (Agricultural Engineering) 
பணி: Assistant Engineer(Civil), (Water Resources Department,PWD)
பணி: Assistant Engineer(Civil), (Buildings, PWD) 
பணி: Assistant Engineer(Electrical) (PWD)
பணி: Assistant Director of Industrial Safety and Health
பணி: Assistant Engineer (Civil) (Highways Department) 
பணி: Assistant Engineer (Fisheries)
பணி: Assistant Engineer (Civil) (Maritime Board)
பணி: Junior Architect

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், உற்பத்தி, விவசாயம், இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல், கெமிக்கல், ஆர்கிடெக்சர், ஸ்டக்சரல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவா்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கட்டண விவரம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.150-ம், பதிவுக் கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒரு முறை பதிவை செய்யாதவர்கள் மட்டும் ரூ.200 செலுத்தி பதிவு செய்ய வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.06.2019 

விவரங்கள் அறிய Click Here

No comments:

Post a Comment