Tuesday, August 14, 2018

ஆக.17-இல் அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம் க்கான பட முடிவு

தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையின் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 17) நடைபெறவுள்ளது

இது குறித்து வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், எண் 32, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள (அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்) ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஆக. 17) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.

500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு...: இந்த முகாமில் 35 வயதுக்கு உள்பட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., பட்டயப் படிப்பு, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பு போன்ற கல்வித் தகுதியை உடையவர்கள் கலந்து கொள்ளலாம். 

இதில் 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களைத் தேர்வு செய்யவுள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment