Tuesday, July 30, 2019

தமிழக அரசில் உதவி சுற்றுலா அதிகாரி வேலை

சுற்றுலா அதிகாரி வேலை க்கான பட முடிவு

சுற்றுலா, பயணம், விருந்தோம்பல் போன்றவற்றில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக தமிழக அரசின் சுற்றுலா துறையில் 42 உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை முதல்முறையாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: உதவி சுற்றுலா அதிகாரி 

காலியிடங்கள்: 42

தகுதி: டிராவல் அண்ட் டூரிஸம் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்கள் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று டிராவல் அண்ட் டூரிஸம் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கூடுதலாகத் தமிழக அரசின் கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate course in Computer on Office Automation) அல்லது அதற்கு இணையாக மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.07.2019 ஆம் தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறும் பிரிவினர் மற்றும் பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் கட்டுப்பாடு கிடையாது. 

கட்டணம்: விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக 100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். 

தேர்வுசெய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வு மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் சுற்றுலா, பயணம் தொடர்பான பாடத்தில் இருந்து 300 மதிப்பெண்ணுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் கொள்குறி வகையில் இடம்பெற்றிருக்கும். 

நேரடியாக உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) பணியில் சேருவோர் உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1), சுற்றுலா அலுவலர், உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2019 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.09.2019

விவரங்கள் அறிய Click Here

டேராடூன் ராணுவக் கல்லூரியில் சேர்க்கை: விண்ணப்பிக்க செப்.30 கடைசி

தொடர்புடைய படம்

உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சேருவதற்கான தேர்வு, சென்னையில் வரும் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 ஆகும்.

எழுத்து தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு மட்டும் 2020-ஆம் ஆண்டு ஏப். 7-இல் நேர்முகத் தேர்வு நடைபெறும். தேர்வுக்கான விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு, முந்தைய தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு போன்றவற்றை கமாண்டன்ட், ராஷ்டிரீய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்தரகண்ட் - 248003 என்ற முகவரிக்கு, விரைவு தபால் வழியே உரிய விண்ணப்ப கட்டணத்தை அனுப்பி பெறலாம் அல்லது www.rimc.gov.in என்ற இணையதளம் மூலமாக பெறலாம்.

விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு, சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வழங்கப்படாது. தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட, நகல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.   

விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர், தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 2020-ஆம் ஜூலை 1-ஆம் தேதியன்று 11 ஆண்டு ஆறு மாதம் வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது, அவர்கள் 2.7.2007-க்கு முன்னதாகவும் 1.1.2009-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. இந்த வயது வரம்பிலிருந்து எந்த தளர்வும் கிடையாது. விண்ணப்பதாரர் ராணுவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும்போது, அதாவது 1.7.2020-இல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, தேர்வு கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், பூங்கா நகர், சென்னை என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு ராஷ்டிரீய இந்திய ராணுவக் கல்லூரி (www.rimc.gov.in ) என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர் தெரிவித்துள்ளார்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு க்கான பட முடிவு

நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் பேர் எழுதிய மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி-டெட்) முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் பணிக்காக மாநில அரசின் சார்பில் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இதேபோல், மத்திய அரசின் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் சேர சி-டெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 
அதன்படி நிகழாண்டுக்கான சி-டெட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 8- ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத 21 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 14 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர். 

நாடு முழுவதும் 20 மொழிகளில் 104 நகரங்களில் இந்தத் தேர்வு நடந்தது. தேர்வு எழுதியவர்களில் 37 ஆயிரம் பேர் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்கள்.  இந்தத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைக் குறிப்பு கடந்த 26-ஆம் தேதி சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வில் அதிக எண்ணிக்கையில் தேர்வர்கள் பங்கேற்றது இதுவே முதல்முறை. 

இந்நிலையில், நடந்து முடிந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளன. தேர்வர்கள் முடிவுகளை www.ctet.nic.in என்ற இணையத்தில் பார்க்கலாம். இதேபோன்று தேர்வர்கள் தங்கள் சான்றிதழை டிஜிட்டல் வடிவத்தில், டிஜிலாக்கர் அக்கவுண்டில் பெற்றுக்கொள்ளலாம். இந்த சி-டெட் தேர்வு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.