Thursday, June 7, 2018

Aavin Chennai Recruitment 2018 (75 Junior Executive (Office) Posts)

Related image

Org Name: Tamilnadu Aavin

Vacancies: 75

Location: Chennai, Tiruvannamalai and Erode 

Name of the Post Junior Executive (Office) - 75

Qualification: Any Degree

Selection Procedure :Written Examination, Oral Test

Last date for Submission of Application: 25.06.2018

Aavin Chennai Official Notification & Application 
Notification: Click Here
Application Form: Click Here

District Child Protection Unit DCPU Perambalur Recruitment 2018

Image result for district child protection unit

Org Name: District Child Protection Unit

Vacancies: Various Posts

Location: Perambalur

Name of the Post:  Assistant cum Data Entry Operator - Various Posts

Qualification: - 10th / SSLC Passed & DCA Experience - One year experience in Computer Operations

Selection Procedure: Short Listing, Interview

Last date for Submission of Application: 19.06.2018

Notification & Application : Click Here

இளைஞர்களுக்காக ஒரு நூலகம்!

Image result for நூலகம்!

பொது நூலகங்களாக இருந்தாலும், தனியார் நூலகங்களாக இருந்தாலும், நூல்களை இரவலாகப் பெறுவதில் சில நடைமுறைகள் உள்ளன. அரசு நூலகங்களில் பாட நூல்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், பொது அறிவுக் களஞ்சியம் போன்ற நூல்களை இரவலாகத் தருவதில்லை. அங்கேயே குறிப்பு எடுத்துக் கொள்ளலாம். ஸ்கேன் செய்து பென்டிரைவ், சிடி போன்றவற்றில் பதிவு செய்துகொள்ளலாம். அல்லது அங்கேயே கட்டணம் செலுத்தி நகல் எடுத்துக் கொள்ளலாம். 

அதேநேரத்தில், தனியார் நூலகங்களில் இதுபோன்ற நூல்களை இரவல் பெற்றுச் செல்லலாம். ஆனால், வாடகை அதிகமாக இருப்பதோடு, நாம் பெறும் நூலின் விற்பனை விலையை முன்பணமாகச் செலுத்த வேண்டும். இதனால், தனியார் நூலகங்களைப் பயன்படுத்துவது அனைவருக்கும் சாத்தியமானது அல்ல. குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கு இது எட்டாக் கனி.

இன்றைய இளைஞர்களின் இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காகவும், அவர்கள் நூல்களைத் தேடி நூலகங்களுக்கு அலையாமல், நூலகத்தையே அவர்கள் இருப்பிடத்திற்கு கொண்டுவந்து சேர்க்கும் வகையிலும் தொடங்கப்பட்டதுதான் தேசிய டிஜிட்டல் நூலகம் (National Digital Library) (NDL-India).குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பணியில் தங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்புவோர், வாழ்நாள் கற்றல் வேட்கை உள்ளவர்கள் பயனடையும் வகையில், இந்த நூலகத்தை Indian Institute of Technology-Kharagpur கட்டமைத்து, மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தி வருகிறது.

இந்த நூலகத்தில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான தொகுதிகளில், 72 லட்சம் வகையான தகவல் களஞ்சியங்கள் சுமார் 6.5 கோடி நூல்களாகவும், இதர வடிவிலும் ஆங்கிலத்தில் உள்ளன. இந்த நூலகத்தில் வெறும் புத்தகங்கள் மட்டுமல்லாமல், கட்டுரை தொகுப்புகள், ஆய்வறிக்கைகள், வீடியோ தொகுப்புகள், ஒலி தொகுப்புகள், கல்வி சார்ந்த தொகுப்புகள், 8 மாநிலங்களின் மாநில பாடத்திட்ட நூல்கள், NCERT பாட நூல்கள், GATE, UPSC கேள்வித் தாள்கள், World e-Book Library போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

இவையல்லாமல், இயற்கை மொழி செயல்முறை, Machine Learning, தொழில்நுட்பத் தேடல்கள், Metadata Engineering, Experience Tracking, தரவு பகுப்பாய்வு போன்றவற்றில் பயனாளர்களுக்கான வசதிகளைத் தருவதற்காக தேசிய டிஜிட்டல் நூலகக் குழு தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. By type தேர்வு மூலம் நமக்குத் தேவையான தகவல்களை வீடியோ, படம், அசைவூட்டப்படம், உருவகப்படம் போன்ற உரை அல்லாத வடிவங்களிலும் பெறலாம். 

தேசிய டிஜிட்டல் நூலகம் தற்போது ஆங்கிலம், ஹிந்தி, வங்க மொழிகளில் மட்டும் உள்ளடக்கங்கள் உள்ளன. இதை பிற வட்டார மொழிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நூலகத்தை 1ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் பிரிவு வரை உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், நூலகர்கள், தொழிலில் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளர்கள் என அனைவரும் பயன்படுத்தலாம்.

NDL-India-வில் உள்ள அனைத்து தகவல்களும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. அதேசமயம், World e Book Library, South Asia  Archive, OECD iLibrary, Satyajit Ray Society உள்ளிட்டவையும் NDL-India-வில் இணைந்துள்ளன. இவற்றின் பெரும்பாலான தகவல்கள் இலவசமாக கிடைத்தாலும், பெரும் தொகுப்பைப் பார்வையிடுவது, பதிவிறக்கம் செய்வது, பிரிண்ட் எடுப்பது போன்றவை அவற்றின் கொள்கை மற்றும் விதிகளுக்கு உட்பட்டதாகும்.

தேசிய டிஜிட்டல் நூலகத்தைப் பயன்படுத்த Personal Computer, Laptop, Mobile Phone இவற்றில் ஏதேனும் ஒன்று, இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதுமானது. இதற்கென தனி ஹார்டுவேர் எதுவும் கிடையாது. NDL-India தகவல்கள் CD-ROM வடிவில் வழங்கப்படுவதில்லை. இந்த நூலகத்தைப் பயன்படுத்த எந்தவித கட்டுப்பாடும் இல்லை. தனிநபர்கள், நிறுவனங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும், அனைத்து வயதினரும் இதில் உறுப்பினராகப் பதிவு பெறலாம். இது முழுக்க முழுக்க அறிவுப் பரவலுக்கான முன்னெடுப்பு என்பதால், இதில் உறுப்பினராகவோ, நூலகத்தைப் பயன்படுத்தவோ எந்தவிதக் கட்டணமும் இல்லை. 

தனிநபர்கள் NDL-India (https://ndl.iitkgp.ac.in) தளத்தில் சென்று செல்லிடப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து தங்களின் சுய விவரங்களுடன் எந்த வகையான பயனாளர் என்பதைத் தெரிவித்து உறுப்பினராகச் சேரலாம். 

NDL-India செயலியை Google Store-இல் இருந்து இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியை iTunes Store-இல் இருந்தும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சர்வதேச அளவில் எத்தனையோ டிஜிட்டல் நூலகங்கள் இருந்தாலும், ஒற்றை சாளர தேடுதல் முறையில், ஒரே இடத்தில் 24 மணி நேரமும் அனைத்து தகவல்களும், அனைத்து வடிவங்களிலும் கிடைக்கக்கூடிய கல்வி சார்ந்த ஒரே டிஜிட்டல் நூலகமாக இது உள்ளது.

MBA.,MCA சேர்க்கை: ஜூன் 13 முதல் விண்ணப்பப் பதிவு

Related image
 
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை வரும் 13-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு, அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதற்கு www.gct.ac.in , www.tn-mbamca.com ஆகிய இணையதளங்கள் மூலம் வரும் 13-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவைச் செய்ய வேண்டும். ஜூலை 12 கடைசி நாளாகும்.

ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர், அதைப் பிரதி எடுத்து உரிய ஆவணங்களை இணைத்து 'செயலர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்சிஏ சேர்க்கை, அரசு பொறியியல் கல்லூரி, கோவை - 641 013' என்ற முகவரிக்கு ஜூலை 16-ஆம் தேதி வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை www.gct.ac.in, www.tn-mbamca.com இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு

Image result for டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு

முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்சிஏ படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை வெளியிட்டது. தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

ஜூன் 13 -ஆம் தேதி முதல் இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் இந்த முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இந்த சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Anna University Recruitment for Clerk & Peon Job post


Org Name: Anna University 

Qualification: 8th, Degree, Graduate

Job Location: Chennai

Name of the Post: Clerk, Peon, Prof. Asst, Clerical Asst

Selection Process: Written Exam, Interview

Last date: 14/06/2018

Apply Method: Postal

Postal Address:
The Dean, 
College of Engineering, 
Guindy Campus, Anna University, 
Chennai – 600 025

Application Form → Click Here

பி.சி., - எம்.பி.சி., விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு


சென்னை: பி.சி., - எம்.பி.சி., விடுதிகளில் சேர, மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரற்கப் படுகின்றன.சென்னையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்த, மாணவ - மாணவியருக்கு என, 14 கல்லுாரி விடுதிகள், தமிழக அரசால் நடத்தப்படுகின்றன. இலவசம் இந்த விடுதிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

வடபழனி நியூ பேரண்ட்ஸ் சாலை, ஓட்டேரி; சைதாப்பேட்டை; கிண்டி தொழிற்பயிற்சி மாணவர் விடுதி; அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி; தாடண்டர் நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில், மாணவர்கள் கல்லுாரி விடுதிகள் உள்ளன. லேடி வெலிங்டன் வளாகம், திருவல்லிக்கேணி; அங்கப்பன் நாயக்கன் தெரு, மண்ணடி உள்ளிட்ட, ஐந்து இடங்களில், மாணவியர் கல்லுாரி விடுதிகள் உள்ளன.

இந்த விடுதிகளில், ஐ.டி.ஐ., - பாலிடெக்னிக், பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் சேரலாம். அனைத்து விடுதிகளிலும், மாணவர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் இலவசம். இந்த விடுதியில் சேர, ஆண்டு வருமானமாக, ஒரு லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இருப்பிடத்தில் இருந்து கல்வி நிலையத்திற்கு, 8 கி.மீ., மேல் இருக்க வேண்டும். இந்த துார விதி, மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய, மாணவ - மாணவியர் விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெறலாம்.

சான்றிதழ்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந்தப் பட்ட விடுதி காப்பாளரிட மும், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், ஜூலை, 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, சாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை; விடுதியில் சேரும் போது, சான்றிதழ்களை அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதிகளிலும், முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தை களுக்கென தனியாக, ஐந்து இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய பல்கலைகளில் சேர்வது எப்படி? 3 நகரங்களில் கல்வி கண்காட்சி


தமிழக மாணவர்கள் ரஷ்ய கல்வி நிறுவனங்களில், மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளில் சேர உதவும் வகையில், ரஷ்ய துாதரகம் சார்பில், சென்னை, சேலம், திருச்சியில் கண்காட்சி நடத்தப்படுகிறது.

ரஷ்ய கூட்டமைப்பின், தென்னிந்தியதுாதரக கலாசார பிரிவு துணைதுாதர், மிகைல் கார்ப்டோவ், துணைதுாதர், யூரி பிலோவ், நேற்றுநிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ரஷ்யஉயர்கல்வி கண்காட்சி, தமிழகத்தில், 20ம் ஆண்டாக நடத்தப்படுகிறது.
  • சென்னை, ஆழ்வார்பேட்டையில்உள்ள, ரஷ்ய கலாசார மையத்தில், வரும், 9, 10ம் தேதிகளில் கண்காட்சிநடத்தப்படும். 
  • சேலம், ஜி.ஆர்.டி., கிராண்ட் ஸ்டான்சியா ஓட்டலில், ஜூன், 11
  • திருச்சி, ரம்யாஸ்ஓட்டலில், ஜூன், 12ல் கல்வி கண்காட்சி நடத்தப்படும்.
ரஷ்யாவின் பிரபலமான, 10க்கும் மேற்பட்ட பல்கலைகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ரஷ்யபல்கலைகளில் படிக்க விரும்புவோருக்கு, சி.இ.டி., மற்றும், ஐ.இ.எல்.டி.எஸ்.,போன்ற முன்தகுதி தேர்வுகள் தேவையில்லை. மருத்துவ படிப்பு படிக்க, இந்தியாவில் நடத்தப்படும், நீட்  தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். நான்கு ஆண்டு கால, இன்ஜினியரிங் படிப்பு மற்றும் ஆறு ஆண்டுகால மருத்துவ படிப்புக்கு முன், ரஷ்ய மொழி முன் தயாரிப்பு படிப்பை,ஓராண்டு படித்திருக்க வேண்டும். 

இந்திய மாணவர்களுக்கு, ரஷ்ய அரசு, கல்வி கட்டண சலுகை வழங்கு கிறது. இதற்கான விபரங்களை, கண்காட்சியில் தெரிந்து கொள்ளலாம்.

IBPS CRP RRBs VII Recruitment 2018 (10190 Posts)


Organization Name
Institute of Banking Personnel Selection 
Website
www.ibps.in
Location
All Over India
Job Category
Central
No. of Posts
10190 Vacancies
Name of the Posts
Officers (Scale-I, II & III) and Office Assistant
Qualification
Any Degree
Selection


Preliminary Examination, Main Examination (objective) & Interview
Apply Mode
Online
Starting Date
08.06.2018
Last Date
02.07.2018

IBPS CRP RRBs VII Online Application & Official Notification:
Website Page: Click Here
Notification : Click Here
Online Application: Click Here

பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு உடனடி வேலை!


அனைவராலும் என்.எப்.எல் என அழைக்கப்படும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய உர நிறுவனம். தெலங்கானா, அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது உத்தரபிரதேசத்தில் செயல்பட்டும் தலைமை நிறுவனத்தில் காலியாக உள்ள 129 ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: JUNIOR ENGINEERING ASSISTANT GRADE II

காலியிடங்கள்: 127

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. PRODUCTION - 60
2. MECHANICAL - 37
3. ELECTRICAL - 12
4. INSTRUMENTATION - 18

பணி: FIREMAN - 02
சம்பளம்: மாதம் ரூ.9,000 - 16,400

வயது வரம்பு: 

18 முதல் 30க்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

தகுதி: 

பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், புரொடக்சன் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் அறிவியல் துறையில் பி.எஸ்சி முடித்தவர்கள் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தீயணைப்பு வீரர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: 

ரூ.235. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: 

ஆன்லைன் தேர்வு மற்றும் உடல்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:
www.nationalfertilizers.com -> Careers -> Recruitment of Non - Executives for NFL‟s Units

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.06.2018 

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: 07.07.2018 (உத்தேசமானது). 

விவரங்கள் அறிய Click Here

இந்திய அஞ்சல் துறையில் ஓட்டுநர் வேலை!


இந்திய அஞ்சல் துறையின் கொல்கத்தா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர்களிடமிருந்து வரும் ஜூலை 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 14 

பணியிடம்: கொல்கத்தா 

பணி: ஸ்டாப் கார் ஓட்டுநர் (Staff Car Driver (Ordinary Grade))

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.20,500 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
‘The Senior Manager, Mail Motor Services, 
139, Beleghata Road, 
Kolkata ‐700015’. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.07.2018

விவரங்கள் அறிய Click Here

பட்டதாரிகளுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரி வேலை



மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் தன்னாட்சி அமைப்பான தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடங்கள்: 

10. (ஆண்கள் 5, பெண்கள் 5) 

பணி: 

ஊக்க மருந்து தடுப்பு அதிகாரி (Doping Control Officer) - 10

சம்பளம்: மாதம் ரூ.30,000

வயது வரம்பு: 

25 முதல் 45க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: 

Life Science, Medical Science, Nursing, Pharmacology, Physiotherapy, Medical Lab Technology, Biotechnology போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கணினி குறித்த அறிவு பெற்றிருப்பது அவசியம். 

தேர்ந்தேடுக்கப்படும் முறை: 

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Director General National Anti Doping Agency, 
A-Block, Pragati Vihar Hostel, 
Lodhi Road, 
New Delhi-110003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.06.2018. 

விவரங்கள் அறிய Click Here

பி.இ. கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: அறிய வேண்டிய அனைத்துத் தகவல்களும்!

Image result for பி.இ. கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு:

சான்றிதழ் சரிபார்ப்பு

  • அசல் சான்றிதழ் சரிபார்ப்பானது அனைத்து உதவி மையங்களிலும் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறும். 
  • காலை 9 - 10 மணி வரை ஒரு பிரிவு, 10-11 மணி வரை இரண்டாம் பிரிவு என ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரிவு மாணவா்கள் என பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். 
  • மதியம் 1 மணி முதல் 1.30 வரை உணவு இடைவேளை. அதன் பிறகு மதியம் 1.30 முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரிவாக மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

மாணவா்கள், தங்களுக்கு குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் உதவி மையத்துக்கு வந்துவிடவேண்டும்.

மாணவா்கள் எடுத்துச் செல்ல வேண்டியது என்னென்ன?

  • சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்ல வேண்டிய மையம், தேதி, நேரம், வரிசை (டோக்கன்) எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மாணவா் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 
  • அதோடு, தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை இணையதளத்தில் தங்களுடைய பயன்பாட்டாளா் குறியீட்டை பயன்படுத்தியும் இந்த விவரங்களை மாணவா்கள் பார்த்துக் கொள்ளமுடியும்.

அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்: 

  • மாணவா்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லும்போது, ஆன்-லைன் பதிவு செய்த விண்ணப்ப நகலை பிரதி எடுத்து அதில் மார்பளவு புகைப்படம் ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்துச் செல்லவேண்டும்.
  • அதோடு, பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள் (இணை மதிப்பெண் சான்றிதழ்), பிளஸ்-2 பொதுத் தோ்வு நுழைவுச் சீட்டு, மாற்றுச் சான்றிதழ், நிரந்தர சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்லவேண்டும். 
  • தேவைப்படுவோர் இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை மாணவருக்கான சான்றிதழ் மற்றும் அதற்கான உறுதிமொழி, இலங்கை அகதிகளுக்கான சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரா் வாரிசு சான்றிதழ், விளையாட்டு வீரருக்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
  • இந்த சான்றிதழ்கள் அனைத்தும் அசல் மற்றும் நகல் இரண்டையும் மாணவா்கள் எடுத்துச் செல்லவேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னா் நகல் சான்றிதழ்கள் மட்டும் உதவி மையத்தில் வைத்துக்கொள்ளப்படும். அசல் சான்றிதழ்கள் அனைத்தும் மாணவா்களிடமே திருப்பியளிக்கப்பட்டுவிடும்.
ஏற்கெனவே வேறு படிப்புகளில் சோ்ந்தவா்கள் என்ன செய்வது? 
  • இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாகவே, வேறு படிப்புகளில் சோ்ந்து அந்தக் கல்வி நிறுவனத்தில் அசல் சான்றிதழ்களை ஒப்படைத்திருக்கும் மாணவா்கள், கல்வி நிறுவனத்தின் முதல்வரிடமிருந்து அத்தாட்சிக் (போனஃபைடு) கடிதத்தையும், அந்த கல்வி நிறுவனத்தின் சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களையும் சமா்ப்பித்தால் போதுமானது. அசல் சான்றிதழ்களை சமா்ப்பிக்கத் தேவையில்லை.
பங்கேற்க முடியாதவா்கள் என்ன செய்வது?
  • கலந்தாய்வு உதவி மையங்களில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்புகளில் தவிர்க்க முடியாத காரணங்களால் மாணவா்கள் பங்கேற்க இயலாதபோது, மாணவருக்குப் பதிலாக அவருடைய பெற்றொர் பங்கேற்கலாம். அவ்வாறு வரும் பெற்றோர் மாணவரின் புகைப்படத்துடன் கூடிய அத்தாட்சிக் கடிதத்தையும், மாணவரின் அசல், நகல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். அதோடு, அந்த பெற்றோர் தங்களுடைய அசல் புகைப்பட அடையாள அட்டை (ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு அட்டை, கடவுச் சீட்டு, வாக்காளா் அடையாள அட்டை, ஆதார் அட்டை) ஏதாவது ஒன்றை சமா்ப்பிக்க வேண்டும். 
  • இவ்வாறு மாணவரோ அல்லது பெற்றோரோ குறிப்பிட்டத் தேதியில் பங்கேற்க இயலாதபோது, கடைசி நாளான ஜூன் 14 ஆம் தேதியன்று சம்பந்தப்பட்ட கலந்தாய்வு உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.
  • இந்த இரண்டாவது வாய்ப்பிலும் பங்கேற்க இயலாத மாணவா்கள், ஜூன் 17 ஆம் தேதி வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என்றார் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை செயலா் ரைமண்ட் உத்தரியராஜ்.

ஆன்-லைன் கலந்தாய்வு குறும்படம்: 
  • சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் மாணவா்கள் அனைவருக்கும், ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வில் எப்படி பங்கேற்பது, இடங்களை எவ்வாறு தோ்வு செய்வது என்பன குறித்த குறும்படம் ஒன்று அனைத்து உதவி மையங்களிலும் போட்டுக் காண்பிக்கப்படும்.
  • அதோடு, ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான முழு விவரங்கள் அடங்கிய சிற்றேடு ஒன்றும் மாணவா்களுக்கு வழங்கப்படும். இந்தச் சிற்றேடை மாணவா்கள் தவறாமல் கேட்டுப் பெற்றுச்செல்ல வேண்டும் எனவும் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.

ஜூன் 11-இல் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

Related image

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 11-ஆம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அ.மலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

இக்கல்லூரியில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான 2018-19-ஆம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை முதல்நிலை கலந்தாய்வு ஜூன் 11-ஆம் தேதி தொடங்குகிறது.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டை மாணவர்களுக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அட்டை கிடைக்கப் பெறாத மாணவர்கள் தாங்கள் பெற்ற கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் உரிய நாளில் அனைத்து அசல், நகல் ஆவணங்களுடன் கல்லூரிக்கு தங்கள் பெற்றோருடன் நேரில் வர வேண்டும். இதைத் தொடர்ந்து ஜூன் 19-ஆம் தேதி இரண்டாம் நிலை கலந்தாய்வு தொடங்குகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2, சிறப்பு துணைப் பொதுத் தேர்வு: ஜூன் 11, 12-ஆம் தேதிகளில் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

Image result for ஆசிரியர் தகுதித் தேர்வு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்') கீழ் விண்ணப்பிக்கலாம்.


பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க...: 

கடந்த மார்ச், ஏப்ரல் (2018) மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித் தேர்வர்களாகவோ எழுதியிருக்க வேண்டும். பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, வருகை புரியாதவர்கள் அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். தத்கலில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, கடலூர், வேலூர், சென்னையில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு எழுத இயலும்.

தத்கலில் விண்ணப்பித்து தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தங்களது மாவட்டத்துக்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வரும் ஜூன் 11, ஜூன் 12 ஆகிய இரு தேதிகளில் தங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். 

பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதியவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தேர்வெழுதாதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டையும் விண்ணப்பத்தினைப் பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். 

தேர்வுக் கட்டணம்: 

ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35, கூடுதலாக சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.50 சேர்த்து உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும். தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் இல்லாமல் தேர்வு செய்ய நடவடிக்கை

Image result for ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வு செய்யும் முடிவு அரசின் பரிசீலனையில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக, வேலைவாய்ப்பினை இளைஞர்கள் பெற முடியாத நிலை கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு தேர்வு வாரியம் மூலமாகத் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை தயவு செய்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்: கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 42 ஆயிரத்து 724 பேர் தேர்வு பெற்றார்கள். அதில், 13 ஆயிரத்து 781 பேர் பணியிடங்களைப் பெற்றனர். மீதம் உள்ளோருக்கு ஏழு ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது. பட்டதாரி ஆசிரியர்களில் 52 ஆயிரத்து 646 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 275 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

அரசின் கடமையல்ல: 

தகுதித் தேர்வைப் பொருத்தவரையில், தேர்வர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்க முடியுமே தவிர, அவர்கள் அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பது என்பது அரசின் கடமையல்ல. ஆனாலும், 2014-ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 938 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் சான்றிதழ் வழங்குவது குறித்துப் பேசப்பட்டது. இதுதொடர்பான விசாரணை, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைந்து அந்தப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு: ஜூன் 11, 12-ஆம் தேதிகளில் தத்கலில் விண்ணப்பிக்கலாம்

Image result for 10th exam