Monday, December 17, 2018

தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி: ஐடிஐ, பிளஸ் டூ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!


தெற்கு ரயில்வேயின் சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் அளிக்கப்பட உள்ள தொழில் பழகுநர் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 4429

பயிற்சி: தொழில் பழகுநர் (Apprentices)

1. சென்னை - 924
2. திருச்சி - 853
3. கோயம்புத்தூர் - 2652

தகுதி: Welder, Carpenter, Painter, Wireman, Fitter, Electrician, R&AC, Winder(Armature), Electronics Mechanic, Turner, Machinist, Diesel Mechanic, MMV,PASAA போன்ற பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்களும், Medical Laboratory Technician (Radiology, Pathology and Cardiology ) பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.sr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2019

விவரங்கள் அறிய 
http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Act_App_Ponmalai.pdf 

http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Act_App_Podanur.pdf 


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.. க்கான பட முடிவு


தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிந்து வருட கணக்கில் காத்திருந்து பழகிபோன தேர்வாளர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக, தேர்வுகள் நடத்தப்பட்டு முதல் முறையாக ஒரு மாதத்திலேயே முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

GROUP 2 RESULT LINK