Wednesday, December 28, 2022

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் IRCTC வேலைவாய்ப்பு



நிறுவனம் : Indian Railway Catering And Tourism Corporation Limited

பணியின் பெயர்: Computer Operator and Programming Assistant(Apprenticeship)

பணியிடங்கள்: 25

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.01.2023

விண்ணப்பிக்கும் முறை : Online


கல்வி தகுதி:

10ம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 15 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம்: 

ரூ.9,000/- வரை ஊதியம் (உதவித்தொகை) வழங்கப்டும் 

தேர்வு செய்யப்படும் முறை:  (Merit List)  

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் 2400+ காலிப்பணியிடங்கள்





மத்திய ரயில்வே வாரியம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது .இதில் Apprentice பணிக்கு என 2400க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.01.2023 இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம்: RRC
பணியின் பெயர்: Apprentice
பணியிடங்கள்: 2422
விண்ணப்பிக்கும் முறை: Online

வயது வரம்பு:

15 முதல் அதிகபட்சம் 24 வரை இருக்க வேண்டும்.மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC/ST பிரிவினருக்கு 05 ஆண்டும்,OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகளாகவும் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அல்லது அதற்கு சமமான (10+2 தேர்வு முறையின் கீழ்) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : Merit List

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.rrccr.com என்ற இணையதளம் மூலம் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.01.2023 இறுதி நாளுக்குள் Onlineல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


TN TRB வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியீடு.

 


தமிழக போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. நேர்காணல் மட்டுமே!!



சென்னையில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை முகவர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் காப்பீட்டு ஆலோசகர்கள், சுயதொழில் செய்வோர் , நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள், உதவிக்குழு உறுப்பினர்கள், வேலை தேடும் இளைஞர்கள் போன்றோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதியுடையவர்கள் சுய விவரக்குறிப்பு, கல்வி தகுதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் டிச.30ம் தேதி சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.