Wednesday, May 2, 2018

மதுரையில் ‘ஆன்லைன் நூலகம்’: வீடு தேடி வரும் புத்தகம்


Image result for ஆன்லைன் நூலகம்

புத்தகத்தை வாங்குவதற்கு ஆகும் செலவு, சில சமயங்களில் புத்தக விலையை விட அதிகமாகி விடுகிறது. அதனால் சிலரின் புத்தக வாசிப்பு ஆசை, இணையத்திலேயே முடங்கி விடுகிறது. ஆனால், இன்று வெளியான புத்தகமாக இருந்தாலும், அரை நூற்றாண்டுக்கு முந்தைய புத்தகமாக இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும், அந்த புத்தகத்தை வீட்டுக்கே இலவசமாக டோர் டெலிவரி செய்கிறது மதுரையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘ரீட்அபிட் மார்டன் நூலகம்’.

நேரடியாகவும் வாசகர்கள் இந்த நூலகத்துக்கு வந்து புத்தகங்களை படிக்கலாம். விரும்பிய புத்தகங்களை தெரிவித்தால், குறிப்பிட்ட அந்த புத்தகங்களை வாங்கியும் கொடுத்து நம்மை படிக்க வைக்கிறார்கள். இதனை தொடங்கியவர் மதுரை அண்ணாநகர் கோமதிபுரத்தைச் சேர்ந்த டி.எஸ்.கோவர்தனன். எம்பிஏ படித்துள்ள இவர், அடிப்படையில் ஒரு புத்தக வாசிப்பாளர். மகனுக்கும் புத்தகம் வாங்கி கொடுத்து வாசிப்பாளராக்கிய அவருக்கு, ஒரு பெற்றோராக தனது கடைமையை சரியாகச் செய்வதாக திருப்தி.

2 ஆயிரம் நூல்கள்

இதன் தொடர்ச்சிதான் நூலகம் ஆரம்பிக்கும் எண்ணம் உருவாகக் காரணம். உடனடியாக களமிறங்கிய அவர், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் நூலகத்தை ஆரம்பித்தார்.

“ஊருக்கு ஊர் நூலகம் இருந்தாலும் மக்களுக் கும் நூலகத்துக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. வாசிப்பாளர்களுக்கும் நூலகங்களுக்குமான இந்த இடைவெளியை நிரப்ப எனது நூலகம் பயன்பட வேண்டும் என நினைக்கிறேன். எல்லாமே இணையவழியில் கிடைத்துவிடுவதால் நிறைய பேர் நூலகத்துக்கு வருவதில்லை என தெரிந்தது.

அதேநேரம், புதிய புத்தகங்கள் இன்டர்நெட்டில் கிடைக்காது. இதனால் வாசகர்கள் விரும்பும் புத்தகங்களை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்தால் அந்த புத்தகத்துக்கான கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு இலவசமாக டோர் டெலிவரி செய்யும் நூலகத்தை ஆரம்பித்தோம். புத்தகத்தை விலை கொடுத்து வாங்க முடியாவிட் டால் வாசகர் விரும்பும் புத்தகத்தின் 30 சதவீத பணத்தை கட்டணமாக செலுத்தி 30 நாள் அந்த புத்தகத்தை வீட்டில் வைத்து படிக்கலாம். 30 நாள் முடிந்ததும் நாங்களே வீட்டுக்குச் சென்று பெற்றுக் கொள்கிறோம். அதுபோக கட்டணம் வாரியாக மாதம்தோறும் புத்தகங்கள் வாங்கி படிக்கும் வசதியும் உள்ளது. readabit.in என்ற இணைய முகவரியில் புத்தக பட்டியலைப் பார்க்கலாம். புதிய புத்தகம் வாங்குவதற்கு வழிகாட்டுவதற்கு எக்ஸ்பர்ட் கமிட்டியும் உள்ளது”என்கிறார் கோவர்தனன்.

புத்தகங்கள் படிப்புக்கும் வாழ்க்கைக்கும் துணையாக இருப்பவை. தேடித் தேடி படித்த காலங்கள் போய், வீட்டில் இருந்தபடியே வாசிக்கும் வசதி கள் வந்துவிட்டன. வாசிப்புக்கான வாய்ப்பு எப்படி இருந்தாலும் என்ன, பயன்படுத்திக் கொள்ள வேண்டியது தான் நமது பணி.

படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக்கும் ‘நீட்ஸ்’ திட்டம்: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

Related image

படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக்கும் புதிய திட்டத்தில் தகுதியுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கும் நோக்கில் தமிழக அரசு ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம்’ (NEEDS) என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் ஐடிஐ பட்டய படிப்பு, இளங்கலை பட்டம் அல்லது இதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றிருப்போருக்கு ஒரு மாதம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்யப்படும். தொடர்ந்து, வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன் பெறவும் வழிவகை செய்யப்படும்.

இத்திட்டத்தின்கீழ் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதலீட்டு மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்துக்கு மேல் அதிகபட்சமாக ரூ. ஒரு கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் சேவை தொழில் தொடங்கலாம். பொது பயனாளி தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவு பயனாளிகள் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தாய்கோ வங்கி, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.

தகுதியுள்ள படித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வு குழுவால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். தகுதிகளையுடைய, ஆர்வமுள்ள இளைஞர்கள் மண்டல இணை இயக்குநர், திருவிக தொழிற்பேட்டை, கிண்டியில் உள்ள அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் NEEDS திட்டத்தில் விண்ணப்பித்து அதன் நகல்கள் இணைப்புகள் உடன் இரண்டு நகல்கள் இவ்வலுலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்கள் அறிய 044-22501620, 21, 22 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

UPSC Recruitment 2018 (454 Assistant Medical Officer Posts)

Image result for UPSC

Org Name: Union Public Service Commission (UPSC)

Employment Category: Central Govt Jobs

Total No. of Vacancies: 454

Job Location: All Over India

Name of the Post & No of Vacancies: Assistant Medical Officer - 454

Qualification: M.B.B.S. 

Selection Procedure: Computer based Examination, Interview

Last date for Submission of Application: 25.05.2018

Application & Official Notification Links:

Website Page: Click Here
Notification: Click Here to Download
Online Application Form: Click Here to Apply

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஊக்கத் தொகையுடன் சிறப்புப் பயிற்சி

Image result for கணினி மென்பொருள் பயிற்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. தகுதியுடையவர்கள் இதில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான வாழ்க்கைத் தொழில் சேவை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வாழ்க்கைத் தொழில் சேவை மையம், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய இலவச சிறப்புப் பயிற்சிகள், கணினி மென்பொருள் பயிற்சி ஆகியவற்றை வழங்கவுள்ளது.

சிறப்புப் பயிற்சி: பயிற்சிக் காலம் 11 மாதங்கள். மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 + 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

கணினி பயிற்சி: 'ஓ' அளவிலான ஓராண்டு கால கணினி மென்பொருள் இலவசப் பயிற்சி பெறுபவருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 + 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் பெற கடைசி நாள் மே 7, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 8. 

மேலும் விவரங்களுக்கு: 

சார் பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான வாழ்க்கைத் தொழில் சேவை மையம், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், வேலைவாய்ப்பு இயக்குநரகம், 56 சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-4 ,தொலைபேசி எண். 044-24615112 -ஐ தொடர்பு கொள்ளலாம்.

தொலைநிலைக் கல்வி தேர்வு மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு

Related image

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன எம்.பி.ஏ., எம்சிஏ, எம்.எஸ்சி. (ஐடி) 2017 டிசம்பர் மாதத் தேர்வுக்கான மறு மதிப்பீடு முடிவுகள் வியாழக்கிழமைவெளியிடப்பட உள்ளது. 

மாணவர்கள் www.ideunom.ac.in என்ற இணைய தள முகவரியில் முடிவுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

எஸ்.ஆர்.எம்.நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: வரும் 7-இல் கலந்தாய்வு தொடக்கம்

Related image

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனத்தில் இளநிலை பொறியியல் படிப்புச் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இது குறித்து எஸ்.ஆர்.எம்.தலைவர் பி.சத்தியநாராயணன் கூறியது:

இங்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் சுறுசுறுப்பான கற்றல் , பயிற்றுவிக்கும் மையம் மற்றும் பலதரப்பட்ட இயல்பைக் கொண்ட கற்பித்தல் மூலம் பயன்பெறலாம். உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் மாணவர்கள், எங்களின் ஆசிரியரிடமிருந்தும், உயர்ந்த அளவிலான உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் தொழில் தொடர்புகளையும் பெருமளவில் கற்றுக்கொள்ள முடியும்.

காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனத்தின் வளாகத்தில் மே 7 முதல் 20 வரை கலந்தாய்வு நடைபெறும். எஸ்.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனம், ஹரியானா மற்றும் எஸ்.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனம் ஆந்திரா, அமராவதியில் மே 10-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையிலும் கலந்தாய்வு அந்தந்த வளாகங்களில் நடைபெறும்.

மாணவர்கள் தங்கள் டாஷ்-போர்டில் உள்நுழைவதன் மூலம் தங்கள் தரவரிசை அட்டை, கலந்தாய்வு அழைப்பு கடிதம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். முதல் நாள் கலந்தாய்வில், தரவரிசை அடிப்படையில் நிறுவனர் உதவித் தொகை வழங்கப்படும். முதல் 100 தரவரிசைக்கு 100 சதவீத கல்வி கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

101 முதல் 500 வரையிலான தரவரிசைக்கு 100 சதவீதம் கல்வி கட்டண தள்ளுபடி செய்யப்படும். 501 முதல் 1000 வரையிலான தரவரிசைக்கு 75 சதவீதம் கல்வி கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

தரவரிசை 1001 முதல் 2000 வரை இடம்பெறுவோருக்கு 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடியும், 2001 முதல் 3000 வரையிலான தரவரிசையில் இடம்பெறுவோருக்கு 25 சதவீதம் கல்வி கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து எஸ்.ஆர்.எம். குழுமங்களிலும் ரூ.30 கோடி மதிப்புள்ள கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

1 லட்சத்து 72 ஆயிரத்து 825 மாணவர்கள் நுழைவு தேர்வுக்கு பதிவு செய்தனர். அவர்களில் 76 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். நாட்டில் 123 மையங்களிலும், மத்தியப் பகுதி முழுவதும் 5 மையங்களிலும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. மொத்த விண்ணப்பதாரர்களில் பெரும்பாலான மாணவர்கள் தமிழ்நாடு, உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரம், தில்லி, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றார் பி.சத்தியநாராயணன்.

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மே 7 முதல் விண்ணப்ப விநியோகம்

Image result for அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில்  விண்ணப்ப விநியோகம்

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 7) முதல் தொடங்குகிறது.

இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டது. அரசு கல்லூரிகள் பக்கம் மாணவர்களை ஈர்க்கும் வகையில், கடந்த ஆண்டு வரை தனியார் கல்லூரிகள் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே, அரசுக் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகத்தை தொடங்கிவிட்டன. 

நிகழ் கல்வியாண்டுக்கான (2018-19) விண்ணப்ப விநியோகத்தை தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் புதன்கிழமை (மே 2) தொடங்கி விட்ட நிலையில், அன்றைய தினம்தான் அரசு கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான அரசு கல்லூரிகள், வரும் திங்கள்கிழமை முதல் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்க உள்ளன. பிள்ஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி அடுத்த 10 வேலை நாள்கள் வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். அன்றைய தினமே பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளாகவும் நிர்ணயிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: 

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 48, பதிவுக் கட்டணம் ரூ. 2 சேர்த்து, ஒவ்வொரு மாணவரிடமும் ரூ. 50 மட்டுமே வசூலிக்கவேண்டும்.

தாழ்த்தப்பட்ட (எஸ்.சி..), பழங்குடியின (எஸ்.டி.) மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தச் சலுகையைப் பெற மாணவர்கள் சாதிச் சான்றிதழ் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Image result for anna university students

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஆன்-லைன் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், அதற்கான விண்ணப்பத்தை வியாழக்கிழமை (மே 3) முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய மே 30 கடைசி நாளாகும்.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு ஆன்-லைனில் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை வியாழக்கிழமை முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்ய மே 30 கடைசி நாளாகும். மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே, கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

விண்ணப்பத்தை எப்படிப் பதிவு செய்வது என்பன உள்ளிட்ட முழு விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்டது. அத்துடன், மாணவர்களின் உதவிக்காகவும், அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் மாணவர்கள் கட்டணம் இன்றி சேவையைப் பெற முடியும். மேலும் விவரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தை (www.annauniv.edu) பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

வேலை இழந்த பிறகு சுலபமாக வேறு வேலை தேடுவது எப்படி?



1. ஒரு இடைவெளி எடுக்கவும்:

உங்கள் கைகளில் எப்போதும் கிடைக்காத அளவு நேரம் இருக்கும். யாரும் கேள்விகள் கேட்க போவது இல்லை வேலைகள் கூறப்போவதும் இல்லை. எனவே அந்த நேரத்தில் எவ்வாறு மனதை ஒருநிலைப்படுத்தி, வலுவாக்கலாம் என்பதை யோசிக்கவேண்டும். குடும்பத்தோடு சிறிது நாட்கள் செலவிடலாம்.

2. உங்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதை நிப்பாட்டுங்கள்:


உங்கள் குறைகள் காரணமாக உங்களது வேலை பறிபோனது என்று யோசிக்க ஆரம்பிக்கும் முன்னர், கொஞ்சம் நிதானமாக சிந்திக்கவும். வேலை பறிபோக பல காரணங்கள் இருக்கலாம்.

3. புதிதாக என்ன திறமைகள் தேவை?


மீண்டும் வேலை தேடும் படலம் துவங்க இருப்பதால், திறமைகள் எவ்வாறு மாறியுள்ளன. வேறு என்ன என்ன திறமைகள் அவசியம் என்பதை தேடிப்பார்க்கவும். ஆட்கள் தேவை என்பது போன்ற விளம்பரங்களில் அவர்கள் கூறும் வரையரைக்குள் தாங்கள் உள்ளீர்களா என்பதை கவனிக்கவும். காலத்திற்கு ஏற்ப மாறுவது அவசியம்.

4. திறமைகளை மேம்படுத்துங்கள்:


வேலை இருக்கும் பொழுது என்ன தேவையோ அதனை மட்டும் செய்துவிட்டு விட்டுவிடுவோம். ஆனால் அப்படி இல்லாமல், தொடர்ந்து தேவையான திறமைகளை வளர்த்து வருவது அவசியம். எனவே இணையத்தில் உள்ள வலைதளங்கள் மூலம் கற்கலாம்.

5. ரெஸ்யூமில் மாற்றம் செய்யுங்கள்:


கிடைக்கும் ஒவ்வொரு ரெஸ்யூமையும் வேலை தருபவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு வரும் 90% விண்ணப்பங்கள் சமந்தமில்லாமல் இருக்கும்.

விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றவாறு தேவையான வார்த்தைகள் அதனில் இருத்தல் வேண்டும். முதல் பக்கத்தில் உங்கள் வேலைக்கு தொடர்பான வார்த்தைகளை எழுதவும்.

சுருக்கமாக உங்கள் வேலைகளை அதில் குறிப்பிடவும். அதில் தேர்வு பெற்றால்தான், அடுத்த பக்கத்திற்கு செல்லுவார்கள்.

6. நேர்மறையான எண்ணங்களை மனதில் கொள்ளவும்:


வேலை இல்லை என்பதால், அடுத்த வேலை கிடைத்த உடன் அதில் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும். இது அடுத்த வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

7. உங்கள் நட்பு வட்டத்தில் இயங்கவும்:


உங்களோடு வேலை செய்தவர்கள், நண்பர்கள், உங்கள் வேலைக்கு தொடர்புடையவர்கள் என பலரோடும் பேசி, சிபாரிசு கிடைக்குமா என்று பாருங்கள்.

8. அறிவுப்புகளை மட்டும் நம்பி இருக்காதீர்கள்:


உங்களுக்கு தெரிந்த வேலை தேடும் தளங்களை தாண்டி, தற்போது நிறுவனங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் ஆட்களை எடுக்கின்றனர்.
மேலும் சமூக வலைத்தளங்கள் மூலம் சமந்தப்பட்ட நிறுவனத்தை நீங்கள் நேரடியாக அணுக இயலும். அவை மூலம், நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளோடு பேச முடிகிறதா என பார்க்கலாம். சரியான சந்தர்ப்பம் அவ்வாறும் அமையலாம்.

9. பொறுமையாக இருங்கள்:


அதிக நாட்கள் பார்த்து பின்பு வேலையில் இருந்து நீக்கப்படுவது போன்று புதிதாக வேலையில் ஒருவரை நியமிக்கவும் நிறுவனங்கள் அதிக நாட்கள் எடுத்துக்கொள்வார்கள். குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் ஆகலாம். எனவே அது வரை பொறுமையாக காத்திருக்கவும். சில காலி இடங்கள் இருந்து, அதற்கு ஆல் சேர்க்க நீண்ட சோதனைகள் இருக்கலாம்.

Firstsource solutions limited Recruitment for Customer support associate (CSA) Job Posts

  Image result for First source solutions limited

Org Name
First source solutions limited
Qualification
Diploma, Graduate
Job Location
Tiruchirappalli
Apply mode
Online
Name of the Post
Customer support associate (CSA)
Job Type
Private



















Name of the Post:

Customer support associate Job Post – 100+ Vacancies

Qualification:

Diploma, Graduates in any discipline (with or without arrear) PG, B.E & MBA are not eligible

Job requirement:

Excellent typing skill (Typing certification added advantage)

Willing to work in night shift

Good Communication skill (Read & write)

5 days working in a week

Apply Mode: Online

Selection Process: Interview

Venue:
Firstsource solutions limited,
2nd floor,
Raja Trade centre, (KFC & unlimited upstairs) McDonalds Road,
Bharathiyar Salai, Trichy-620008.
Please walk-in to below address from 10 am (Daily).

Refer your friends. Please carry all your original education documents and address & ID proof verification.

Official Notification -> Click Here

நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் கவனத்துக்கு!!!

Related image

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை (மே 6) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்க இருக்கிறது.இந்தத் தேர்வை எழுதப்போகும் தமிழக மாணவர்களுக்கான தேர்வு மையத்தைத் தமிழகத்திலேயே ஒதுக்கும்படி, சி.பி.எஸ்.சி-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்ற வருடம் நடந்ததுபோல குழப்பம் மற்றும் பதற்றமின்றி, நீட் தேர்வை எழுதவும் கிராமத்து மாணவர்களும் நீட் தேர்வில் வெல்லவும், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியின் உயிரியல் ஆசிரியரும், நீட் தேர்வு பயிற்சியாளருமான எஸ்.என்.ராஜன் வழிமுறைகள் சொல்கிறார்.

  • பெரும்பாலும் பெற்றோர்கள் பதற்றமடைந்து, அதைப் பிள்ளைகளுக்கும் கடத்திவிடுகிறார்கள். எனவே, பெற்றோர்கள் நிதானமாக இருந்தாலே, மனக் குழப்பத்தில் மாணவர்கள் செய்யும் தவறுகளைத் தடுக்கலாம்.
  • நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டில் எதையெல்லாம் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது எனக் கொடுத்திருக்கும் அறிவுறுத்தல்களை, கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். சென்ற வருடம், முழுக்கைச் சட்டை அணியக் கூடாது என்று சொல்லப்பட்டிருந்தது. முழுக்கைச் சட்டை அணிந்துவந்தால், தேர்வு எழுத அனுமதியில்லை அல்லது சட்டையை அரைக் கையாக வெட்டிவிட்டு எழுத அனுமதிக்கலாம் என்று சொல்லப்பட்டதால், அப்படியொரு சம்பவம் நடந்தது.
  • கண்களால் பார்த்து கண்டுபிடிக்க முடியாதபடி, மிகச்சிறிய கேமராக்கள் தற்காலத்தில் வந்துவிட்டன. அவற்றை மறைத்துவைக்கும் வகையிலான அணிகலன்களைக் கண்டிப்பாக அணியக்கூடாது. உதாரணத்துக்கு, பெரிய பட்டன்கள் வைத்த ஆடை, கால்களை மூடிய செருப்புகள், ஷூ, பெரிய சைஸ் நகைகள், பெரிய டாலர், தலையில் போடும் பெரிய பேண்டு, பெரிய கிளிப்ஸ், பெரிய தோடு, வாட்ச் இவற்றையெல்லாம் முற்றிலும் தவிர்க்கவும். மூக்குக் கண்ணாடியைப் பரிசோதித்தே அனுமதிப்பார்கள்.
  • இந்த வருடம், தேர்வுக்கு இடையில் கழிப்பறைக்குச் செல்லவேண்டுமானால், அட்டெண்டர் ஒருவர் வருவார். 3 நிமிடங்களுக்கு மேலாக பாத்ரூமில் இருந்தால், பரிசோதிக்க வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கிறது. எனவே, பதற்றமாகாதீர்கள். தவறு செய்கிறவர்களைத் தடுக்கவே இந்த நிபந்தனை.
  • வெளியூரிலிருந்து வரும் மாணவர்கள், தேர்வு மையத்தில் தங்கள் உடைமைகளை வைப்பதற்கு இடம் தருவார்கள் என்று நம்பி வர வேண்டாம். அப்படிப்பட்ட வசதிகள் எதுவும் இல்லை. எனவே, பொறுப்பான யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு வரவும்.
  • ஐ.டி.கார்டு (அட்மிட் கார்ட்), ஒரு போட்டோ, ஆதார் கார்டு போன்றவற்றைக் கண்டிப்பாக எடுத்துச்செல்லுங்கள்.
  • சென்ற வருடம் அம்மாவின் பெயரை எழுதவேண்டிய இடத்தில், பல மாணவர்கள் அம்மாவை வீட்டில் அழைக்கும் பெயரை எழுதிவிட்டார்கள். இதைப் பரிசோதிக்கும் கண்காணிப்பாளர் கேள்வி கேட்பார். ரேஷன் கார்டு, பேன் கார்டு, ஆதார் போன்றவற்றில் எப்படி இருக்கிறதோ அந்தப் பெயரைத்தான் எழுத வேண்டும். இதையும் நினைவில் வையுங்கள்.
  • சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு, ஓ.எம்.ஆர். ஷீட்டைப் பூர்த்திசெய்த அனுபவம் இருப்பதால் பதற்றமில்லாமல் செய்துவிடுகிறார்கள். ஆனால், ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கு அந்த அனுபவம் இல்லாததால், நிறையத் தவறு செய்கிறார்கள். கண்காணிப்பாளர், அதைப் பலர் முன்னிலையில் சொல்லித் திருத்தச் சொல்லும்போது, கிராமத்திலிருந்து வந்திருக்கிற மாணவர்கள் பயம், டென்ஷன், வெட்கம் போன்றவற்றால் தவித்துவிடுகிறார்கள். இதுபோன்ற விஷயத்தைத் தடுப்பது, நீட் கோச்சிங் தரும் சென்டர்களின் கையில்தான் இருக்கிறது.
  • நீட் எக்ஸாம் நடக்கும் பள்ளிக்கூடங்களில் ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்புகள் செய்கிறார்கள். அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத கிராமத்து மாணவர்கள், சில அறிவுறுத்தல்களைத் தவறவிடுகிறார்கள். ஹாலுக்குள் வந்ததும், 'நாங்கள் ஏற்கெனவே அறிவித்தோமே கவனிக்கலையா?' என்று கண்காணிப்பாளர் கேட்கும்போது கூச்சப்பட்டுப் போகிறார்கள். சென்ற வருடம், எங்கள் பள்ளிக்கூடத்தில் தமிழிலும் அறிவிப்பு செய்தோம். இதை மற்றவர்களும் செய்தால் நன்றாக இருக்கும்.
  • கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் வரும் கணிதக் கேள்விகளை, அதற்காகத் தரப்பட்டுள்ள ரஃப் ஷீட்டில் பேனாவால் போட்டுப் பார்க்கிறார்கள். பிறகு, பேப்பர் போதாமல் மறுபடியும் கேட்கிறார்கள். அந்த ரஃப் பேப்பரும் கேள்வித்தாளுடன் இணைக்கப்பட்டு வருவதால், அதைத் தாண்டி எங்களிடம் வேறு பேப்பர் கிடையாது. அதனால், கணக்குகளைப் போட்டுப் பார்த்து பதில் எழுத முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். பேனாவுக்குப் பதில் பென்சிலால் கணக்குகளைப் போட்டுப் பார்த்தால், ஒன்றை அழித்துவிட்டு அடுத்த கணக்கைப் போடலாம்.
  • கறுப்பு பால் பாயின்ட் பேனாவைப் பயன்படுத்தி மட்டுமே ஓ.எம்.ஆர். ஷீட்டில் பதில்களை ஷேட் செய்ய வேண்டும்.
  • ஓ.எம்.ஆர். ஷீட்டில் தங்களுடைய பெயர் மற்றும் ரோல் நம்பரை ஷேட் செய்யும்போது, நிறையத் தவறுகள் செய்கிறார்கள். உதாரணத்துக்கு ' UMA' என்கிற பெயரின் முதல் எழுத்தை, முதல் வரிசையில் இருக்கும் U-விலும், அடுத்து, M-ஐ அடுத்த வரியிலும், A-வை அதற்கடுத்த வரியிலும் ஷேட் செய்ய வேண்டும். ஒரே வரிசையில் இரண்டு தடவை ஷேட் செய்துவிட்டால், கண்காணிப்பாளர் அதைச் சரிசெய்தால், அடித்தல், திருத்தல் வருகிறது, கண்காணிப்பாளர், 'அங்கே சைன் செய்யுங்கள்' என்று சொல்லும்போது, பதற்றம் தொற்றிக்கொள்கிறது. கிராமத்து மாணவர்கள், பாடவாரியாக வலுவாக இருக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற விஷயங்களில் அனுபவமின்மை காரணமாக, பலவீனமாக இருக்கிறார்கள். 

''இதை ஆசிரியர்களும், நீட் கோச்சிங் சென்டர்களும்தான் சரிசெய்ய முடியும். செய்யவேண்டியது அவர்களின் கடமை. நமக்கான மருத்துவர்கள், கிராமங்களிலிருந்தும் உருவாக வேண்டும்''

தேசிய காற்றாலை மையத்தில் அதிகாரி வேலை

Image result for National Institute of Wind Energy

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காற்றாலை மையத்தில் "National Institute of Wind Energy"-இல் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: 

Project Coordinator(ITCS) - 01
தகுதி: எச்ஆர், நிதியியல் துறையில் எம்பிஏ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000 - 40,000
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

பணி: 

Accounts Executive - 02
சம்பளம்: மாதம் ரூ.35,000 - 40,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Tally, MS Office முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 
www.niwe.res.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அட்டெஸ்ட் பெற்ற தேவையான நகல் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Deputy Director General (F & A), 
National Institute of Wind Energy, 
Velachery - Tambaram Main Road, 
Pallikarani,
Chennai - 600 100.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.05.2018

விவரங்கள் அறிய Click Here

குரூப் 2ஏ தேர்வு: சான்றிதழ் பதிவேற்ற நாளை மறுநாள் கடைசி

Image result for 10 result

குரூப் 2ஏ தேர்வுக்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வரும் வெள்ளிக்கிழமை (மே 4) கடைசி நாளாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் முதன் முறையாக சான்றிதழ் சரிபார்ப்புப் பணியானது ஆன்-லைனில் முறையில் நடைபெறுகிறது.

இதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வரும் வெள்ளிக்கிழமை கடைசியாகும். ஆன்-லைன் வழியாக சான்றிதழ் சரிபார்க்கும் புதிய நடைமுறை குரூப் 2ஏ தேர்வில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக சான்றிதழ் பதிவேற்றும் பணிகள் கடந்த 23-ஆம் தேதியில் இருந்து தொடங்கின.

இந்நிலையில், சான்றிதழ் பதிவேற்றம் வரும் வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது. அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாக தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து வந்தனர்.  இதற்காக ஒரு சான்றிதழ் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.