புதுச்சேரி அரசின் காவல்துறையில் காலியாக உள்ள 390 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Police Constable
காலியிடங்கள்: 390
சம்பளம்: மாதம் ரூ.21,700
வயதுவரம்பு: 22.09.2018 தேதியின்படி 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு பிளஸ் டூ பாடங்கள் அடிப்படையில் அமைந்திருக்கும்.
தேர்வு நடைபெறும் இடம்: புதுச்சேரி
விண்ணப்பிக்கும் முறை: www.police.pondicherry.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:22.09.2018
விவரங்கள் அறிய www.police.pondicherry.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment