Saturday, September 1, 2018

தமிழ்நாடு தொழிற் முன்னேற்ற கழகத்தில் உதவி பொறியாளர் வேலை


சிப்காட் என அழைக்கப்படும் தமிழ்நாடு தொழிற் முன்னேற்ற கழகத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Assistant Engineer (Civil)

காலியிடங்கள்: 11

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பதவி: Assistant Engineer (Electrical)

காலியிடங்கள்: 01



தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.36,700 - 1,16,200

வயதுவரம்பு: 01.09.2018 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி அனைத்து பிரிவினருக்கும் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.sipcot.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2018

விவரங்கள் அறிய www.sipcot.com என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment