நமது நாட்டின் வங்கித்துறையை நிர்வகித்தல், கட்டுப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் மத்திய வங்கியாகவும், அரசின் நிதித்துறை சார்ந்த முக்கிய முடிவுகளை வழங்குவதாகவும் பாரத ரிசர்வ் வங்கி இருக்கிறது. இதில் 166 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம்:
அதிகாரிகள் பிரிவு 'பி' - ஜெனரலிஸ்ட் பதவியில் 127 இடங்களும், இதே பிரிவிலான டி.இ.பி.ஆர்., பதவியில் 22 இடங்களும், இதே பிரிவிலான டி.எஸ்.ஐ.எம்., பிரிவில் 17 இடங்களும் சேர்த்து மொத்தம் 166 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது:
2018 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
ஜெனரலிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்களுடன், ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். டி.இ.பி.ஆர்., பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எகனாமிக்ஸ் பிரிவில் முதுநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். டி.எஸ். ஐ.எம்., பிரிவுக்கும் எகனாமிக்ஸ் படிப்பு தேவைப்படும்.
தேர்ச்சி முறை:
இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ச்சி நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850.
கடைசி நாள்: 2018 ஜூலை 23.
விபரங்களுக்கு: Click Here
No comments:
Post a Comment