Thursday, June 21, 2018

நாளை மதுரையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்


மதுரையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறைகள் பங்கேற்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது.

இதுகுறித்து மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் என்.மகாலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.

தனியார் துறைகள் பங்கேற்கும் இந்த வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை புதூர் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடத்தப்படுகிறது.

இதில் தனியார் துறையைச் சேர்ந்த சில முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளன. ஆகவே முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் 22 ஆம் தேதி காலையில் புதூர் பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment