Thursday, June 21, 2018

"மயிலாடுதுறையில் ஜூன் 30 முதல் குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு'

Related image

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் ஜூன் 30 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் ஏழை, எளிய மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என சிட்டி யூனியன் வங்கி துணைப் பொது மேலாளர் ஏ. ராமசாமி கூறினார்.

மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம், நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் ஆகியவை சார்பில் நகராட்சி நூலகம் - தன்னார்வ பயிலும் வட்ட வளாகத்தில் ஜூன் 30-ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சியளிக்கவுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற இதன் தொடக்க விழாவில், சிட்டி யூனியன் துணைப் பொது மேலாளர் ஏ. ராமசாமி போட்டித் தேர்வுக்கான வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு மேலும் அவர் பேசியது :
நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள் 12 பேர் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்றார்.

தன்னார்வ பயிலும் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ். சிவராமன் : மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் 100 பேர் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். பயிற்சி வகுப்புகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பயிற்சி வகுப்பு ஜூன் 30 தொடங்கி செப். 16 -ஆம் தேதியுடன் நிறைவு பெறும்

No comments:

Post a Comment