திருப்பூர் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-2 தேர்வுக்கான, இலவச பயிற்சி முகாம் இன்று துவங்குகிறது.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக, அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசுப்பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடக்கும், போட்டி தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி வகுப்பு, இன்று முதல் துவங்குகிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும் பயிற்சி முகாமில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பங்கேற்கலாம்.பயிற்சியில் சேர, பாஸ்போர்ட் அளவு போட்டோ, வேலை வாய்ப்பு பதிவு அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பயிற்சி முகாமில் பங்கேற்று பயனடைய வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
No comments:
Post a Comment