மத்திய அரசின் ‘நேஷனல் போர்ட் ஆப் எக்சாமிநேஷன்’ வழங்கும் ‘டிப்ளொமேட் ஆப் நேஷனல் போர்ட்’ (டி.என்.பி.,) படிப்பிற்கான நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டி.என்.பி., படிப்பு:
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி டி.என்.பி., பட்டமானது எம்.டி., எம்.எஸ்., டி.எம்., எம்.சிஎச்., தகுதிகளுக்கு இணையான ஒன்று. இந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்க்கை பெற இயலும்.
தகுதிகள்:
எம்.பி.பி.எஸ்., படித்திருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருடம் இன்டர்ன்ஷிப் பயிற்சியை நிறைவு செய்திருக்க வேண்டும் அல்லது ஆகஸ்ட் 31, 2018ம் தேதிக்குள் நிறைவு செய்பவராக இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். கணினி வழி தேர்வாக மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 31
தேர்வு நாள்: ஜூன் 29
தேர்வு முடிவுகள்: ஜூலை 31
விபரங்களுக்கு: Click Here
No comments:
Post a Comment