இக்னோ என்ற, இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலையில், எம்.பி.ஏ., நுழைவுத்தேர்வு, ஜூன், 24ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்னோவில், தொலைநிலையில், எம்.பி.ஏ., படிக்க, ஏதாவது ஒரு பட்டப்படிப்பில், குறைந்தபட்சம், பொது பிரிவினர், 50 சதவீதமும், மற்ற பிரிவினர், 45 சதவீதமும், மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்பில் சேர, ஜூன், 24ல் நுழைவு தேர்வு நடத்தப்படும். இதற்கான விண்ணப்பங்களை, ஜூன், 1 வரை சமர்ப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்களை, http://www.ignou.ac.in/ என்ற இணையதளத்திலும், 044 - -2661 8438 மற்றும், 044- - 2661 8039 என்ற எண்களிலும் பேசி, தெரிந்து கொள்ளலாம் என, இக்னோ சென்னை மண்டல இயக்குனர் கிஷோர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment