இந்திய மாணவர்கள், இத்தாலியில் கல்வி பயில, பயிற்சிகளில் ஈடுபட மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது!
’இத்தாலியின் கவர்ன்மண்ட் ஸ்காலர்ஷிப் 2018-19’
அயல்நாடுகளுக்கு இடையிலான கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணைப்புகளை வலுப்படுத்தி பொருளாதாரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில், வெளிநாட்டு மாணவர்களை, இத்தாலியில் உயர்கல்வி மேற்கொள்ள செய்யவும், ஆராய்ச்சிகளில் ஈடுபட வைக்கவும் அந்நாட்டு அரசாங்கம் உதவித்தொகைகளை வழங்குகிறது.
இந்தியாவைச் சேர்ந்த ஆர்வமிக்க இந்திய மாணவர்கள், 2018-19ம் கல்வி ஆண்டிற்கான இந்த உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மூன்று, ஆறு அல்லது ஒன்பது மாதங்கள் கால அளவு கொண்ட இந்த உதவித் தொகை திட்டத்திற்கு இந்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது.
தகுதிகள்: இளநிலை பட்டத்திற்கு இணையான ‘லவ்ரியா’ பாடத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கக் குறைந்தது 12 ஆண்டுகள் பள்ளி படிப்பை முடித்திருக்க வேண்டும். முதுநிலை படிப்பிற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பிஎச்.டி., படிப்பிற்கு இத்தாலியில் சேர விரும்பும் கல்வி நிறுவனத்திடம் இருந்து, மாணவர்கள் ஆராய்ச்சிக்கான ஒப்புதல் கடிதம் பெற்றிருக்க வேண்டும். இத்தாலிய மொழி மற்றும் கலாசாரம் குறித்த படிப்பில் சேர விரும்புவோர் தங்களது இத்தாலிய மொழி தேர்ச்சி சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு: முதுநிலை படிப்பிற்கு 28 வயதிற்கு உட்பட்டவராகவும், பிஎச்.டி., பட்டத்திற்கு 30 வயதிற்கு உட்பட்டவராகவும், மேற்பார்வையுடன் கூடிய ஆராய்ச்சி திட்டத்திற்கு 40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
படிப்புகள்: உயிரியல், கட்டடக்கலை, இயற்பியல், கணிதம், வேதியியல், மின் மற்றும் சுற்றுப்புற பொறியியல், நானோ டெக்னாலஜி ஆகிய பிரிவுகளுக்கு 6 அல்லது 9 மாதங்கள் உதவித் தொகையுடன் கூடிய கால அளவு வழங்கப்படுகிறது. இத்தாலிய மொழி மற்றும் கலாசாரம் சார்ந்த படிப்பிற்கு 3 மாதங்கள் கால அளவு வழங்கப்படுகிறது.
குறிப்பு: ஏற்கனவே வெளிநாடுகளில் உதவித் தொகையுடனோ அல்லது சொந்த செலவிலோ ஆறு மாதங்களுக்கு மேல் கல்வி பயின்றவர் என்றால், தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். இல்லையேல் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
உதவித்தொகை காலம்: ஆக்டோபர் 1, 2018 முதல் செப்டம்பர் 30, 2019 வரை.
உதவித்தொகை: இந்தத் திட்டத்தின் மூலம் சேர்க்கை பெறும் இந்திய மாணவர்களுக்குக் கல்வி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதர செலவிற்காக மாதந்தோறும் 900 யூரோக்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக் குறைய ரூ.72,000) வழங்கப்படும். மேலும், மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடுகளும் உண்டு.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 30
விபரங்களுக்கு: https://studyinitaly.esteri.it
No comments:
Post a Comment