Friday, April 27, 2018

உதவி வன பாதுகாவலர் பதவி முதன்மை எழுத்து தேர்வு ஜூலை 28ல் தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Image result for tnpsc

உதவி வன பாதுகாவலர் பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு ஜூலை 28ம் தேதிதொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

 (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப்பணி குரூப் 1ஏல் அடங்கிய உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான 14 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது.

இத்தேர்வில் 10,459 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்ட 472 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும்.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment