Wednesday, December 28, 2022

தமிழக போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. நேர்காணல் மட்டுமே!!



சென்னையில் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை முகவர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் காப்பீட்டு ஆலோசகர்கள், சுயதொழில் செய்வோர் , நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள், உதவிக்குழு உறுப்பினர்கள், வேலை தேடும் இளைஞர்கள் போன்றோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகுதியுடையவர்கள் சுய விவரக்குறிப்பு, கல்வி தகுதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் டிச.30ம் தேதி சென்னை அண்ணாசாலை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.

No comments:

Post a Comment