நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள கணினி பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் பி.இ கணினி அறிவியல் பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : கணினி பொறியாளர்
காலிப் பணியிடங்கள் : 05
கல்வித் தகுதி : பி.இ கணினி அறிவியல் பொறியியல் பட்டதாரிகள்
வயது வரம்பு : அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.05.2020
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் : பொது / ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 854 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 354
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here
No comments:
Post a Comment