தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (TNPCB) காலியாக உள்ள தட்டெழுத்தாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 56 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : தட்டெழுத்தாளர்
காலிப் பணியிடங்கள் : 56
கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பிரிவில் முதுகலை சான்றிதழ் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500 எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி, விதவைகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpcb.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 13.05.2020
விண்ணப்பப் படிவத்தினைப் பெற : Click Here
No comments:
Post a Comment