Saturday, June 9, 2018

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலை.யில் பொறியியல், சட்டக்கல்வி சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

Image result for பொறியியல்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2018 - 19ஆம் ஆண்டுக்கான பொறியியல் மற்றும் சட்டக்கல்வி சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

இந்த தரவரிசைப் பட்டியலில், கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டிய நேரம், நாள் போன்ற விவரங்கள் மாணவர்களுக்கு www.sastra.edu என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகுதி அடிப்படையில் வெளிப்படையான கலந்தாய்வு ஜூன் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.

சட்டக்கல்விக்குத் தகுதி அடிப்படையில் வெளிப்படையான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 2018 ஜூன் 19-ம் தேதி நடைபெறும். தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், தில்லி, குஜராத், உத்தரபிரதேசம், கோவா, பிகார், ராஜஸ்தான், அஸ்ஸாம், ஜார்கண்ட், கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து 20,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பொறியில் சேர்க்கைக்கு 1,600 இடங்களும், சட்டக்கல்வி சேர்க்கைக்கு 120 இடங்களும் நிரப்பப்படவுள்ளன. இதே போன்று வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, சிக்கிம், அருணாசலபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிகோபார் ஆகிய மாநில மாணவர்களுக்குச் சேர்க்கையில் தனிச்சலுகை வழங்கப்படும்.

மேலும், தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தலா 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவல் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment