Tuesday, June 5, 2018

தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை தொடக்கம்

Image result for தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை

தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் (வெள்ளிக்கிழமை) முதல் மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

இசைப்பள்ளி 

தூத்துக்குடியில் உள்ள அரசு இசைப்பள்ளியில் மாணவ– மாணவிகள் சேர்க்கை (வெள்ளிக்கிழமை) முதல் நடக்க உள்ளது. இந்த பள்ளியில் சேர்வதற்கு 12 வயதுக்கு மேல், 25 வயதிற்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரத நாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளி படிப்பின் கால அளவு 3 ஆண்டுகள் ஆகும். இந்த பள்ளியில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அனைத்து மாணவ– மாணவிகளுக்கும் அரசு விடுதி வசதி செய்து தரப்படும். வெளியிடங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண வசதியும் செய்து தரப்படும்.

வேலை வாய்ப்புகள் 

3 ஆண்டுகள் படித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணிபுரியவும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இசைப்பள்ளியில் தேவார இசை படித்து தேர்ச்சி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு... 

எனவே கலை ஆர்வமுள்ள மாணவ– மாணவிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, ‘தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, குரூஸ்புரம் சமுதாய நலக்கட்டிடம், தூத்துக்குடி’ என்ற முகவரியிலும், 0461–2300605 மற்றும் 9443810926 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment