Thursday, June 14, 2018

தேசிய பாதுகாப்பு கழகத்தில் 383 காலியிடங்கள் அறிவிப்பு

Image result for upsc

நம் நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கான பிரத்யேக கல்வி நிறுவனங்களாக நேஷனல் டிபன்ஸ் அகாடமி, நேவல் அகாடமி போன்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பயிற்சி பெற்று பாதுகாப்பு படைகளில் நேரடியாக இணைவதை இளம் தலைமுறையினர் பெருமையாக நினைக்கின்றனர். பெருமைக்குரிய இந்த கல்வி நிறுவனங்களில் யு.பி.எஸ்.சி., அமைப்பு மூலமாக காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்:

நேஷனல் டிபன்ஸ் அகாடமியில் 339 இடங்களும் (இதில் தரைப்படை 208, கப்பல்படை 39ம், விமானப்படை 92) , நேவல் அகாடமியில் 44 இடங்களும் என மொத்தம் 383 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

வயது:

திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இவர்கள் 2000 ஜன. 2 முதல் 2003 ஜன. 1க்குள் பிறந்திருக்க வேண்டும். 

கல்வித் தகுதி :  பிளஸ் 2 

விண்ணப்பிக்கும் முறை :

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்ப கட்டணம்: ரூ. 100. 

தேர்ச்சி முறை : 

எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையங்கள்: 

எழுத்துத் தேர்வு, சென்னை, மதுரை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்கள் ஏதாவது ஒன்றில் எதிர் கொள்ளலாம்.

கடைசி நாள் : 2018 ஜூலை 2.

விபரங்களுக்குClick Here

No comments:

Post a Comment