Friday, June 1, 2018

தமிழ்நாடு மின் வாரியத்தில் 2,450 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

Image result for TNEB

தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவிப் பொறியாளர், இளநிலை உதவியாளர், கள உதவியாளர் என 2 ஆயிரத்து 450 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்று பேரவையில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி நேற்று வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:- 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 150 உதவிப் பொறியாளர் (எலக்ட்ரிக்கல்), 25 உதவிப் பொறியாளர் (சிவில்), 25 உதவிப் பொறியாளர் (இயந்திரவியல்), 250 இளநிலை உதவியாளர் (கணக்கு), கோவை மற்றும் ஈரோடு மண்டலத்துக்கு மொத்தம் ஆயிரம் கள உதவியாளர் மற்றும் பிற மண்டலங்களுக்கான ஆயிரம் கள உதவியாளர் பதவிகளுக்கான தகுதியான நபர்கள் வெளிப்படையான முறையில் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இன, இடஒதுக்கீடு அடிப்படையில் நேரடி நியமனம் செய்யப்படுவார்கள்.

No comments:

Post a Comment