Thursday, June 7, 2018

ஜூன் 11-இல் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

Related image

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 11-ஆம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அ.மலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

இக்கல்லூரியில் இளநிலைப் பாடப் பிரிவுகளுக்கான 2018-19-ஆம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை முதல்நிலை கலந்தாய்வு ஜூன் 11-ஆம் தேதி தொடங்குகிறது.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டை மாணவர்களுக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அட்டை கிடைக்கப் பெறாத மாணவர்கள் தாங்கள் பெற்ற கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் உரிய நாளில் அனைத்து அசல், நகல் ஆவணங்களுடன் கல்லூரிக்கு தங்கள் பெற்றோருடன் நேரில் வர வேண்டும். இதைத் தொடர்ந்து ஜூன் 19-ஆம் தேதி இரண்டாம் நிலை கலந்தாய்வு தொடங்குகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment