இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் முதன்மையானதும், ரிசர்வ் வங்கிக்கு அடுத்தபடி பெரிதும் பலம் வாய்ந்ததுமான பாரத ஸ்டேட் வங்கி, எஸ்.பி.ஐ., என்ற பெயரால் அனைவராலும் அறியப்படுகிறது. நாடு தழுவிய அளவில் கிளைகள், லட்சக்கணக்கான ஏ.டி.எம்.,களைக் கொண்டுள்ளது. இங்கு காலியாக உள்ள, 2,000 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: 2018 ஏப்.,1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 2018 ஆக., 31 அடிப்படையில், ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வு என இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, பின், நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 600 ரூபாய்.
கடைசி நாள் : 2018 மே 13.
விபரங்களுக்கு: Click Here
No comments:
Post a Comment