Saturday, May 11, 2019

இசை, நடன டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பம் வரவேற்பு

இசை, நடன டிப்ளமோ படிப்பு க்கான பட முடிவு

பரதநாட்டியம், கர்னாடக இசை யில் டிப்ளமோ படிக்க, பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்க லாம் என்று கலாஷேத்ரா கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னை திருவான்மியூரில் இயங்கி வருகிறது கலாஷேத்ரா அறக்கட்டளை கல்வி நிறுவனம். இது மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இங்கு பரதநாட்டியம், கர்னாடக இசை (வாய்ப்பாட்டு, வீணை, வயலின், புல்லாங்குழல், மிருதங்கம்) மற்றும் விஷுவல் ஆர்ட்ஸ் பாடங்களில் 4 ஆண்டு கால முழுநேர டிப்ளமோ படிப்பு கள் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்தவர்கள் இதில் சேரலாம். 2019-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. இப்படிப்புகளில் சேர விரும்புவோர் ஆன்லைனில் (www.kalakshetra.in/admissions) மே 31-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும் என்று கலா ஷேத்ரா அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment