மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய அணுமின் நிலையத்தில் (என்பிசிஐஎல்) காலியாக உள்ள 200 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 200
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. மெக்கானிக்கல் - 83
2. கெமிக்கல் - 13
3. எலக்ட்ரிக்கல் - 45
4. எலக்ட்ரானிக்ஸ் - 5
5. இன்ஸ்ட்ருமென்டேசன் - 5
6. சிவில் - 40
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கண்ட்ரோல் இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 23.04.2019 தேதியின்படி பொதுப்பிரிவினர் 26க்குள்ளும், ஒபிசி பிரிவினர் 29க்குள்ளும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு - 31க்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் - 41க்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500, எஸ்சி எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை : https://npcilcareers.co.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2019
விவரங்கள் அறிய Click Here
No comments:
Post a Comment