Saturday, February 2, 2019

சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை உடனே விண்ணப்பிக்கவும்!


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை(பயிற்சிப் பிரிவு) சென்னை ஆணையரகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. 

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 06

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்புக்கு மேல் தகுதி பெற்றவர்களுக்கு உச்சபட்ச வ.யதுவரம்பு இல்லை. 

சம்பளம்: மாதம் ரூ.15,700 + இதர சலுகைகள்

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பபடிவம் மற்றும் விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணணயதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: நிர்வாக அலுவலர் (பணியமைப்பு), வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை(பயிற்சிப் பிரிவு) கிண்டி, சென்னை - 32

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2019

விவரங்கள் அறிய Click Here


No comments:

Post a Comment