Friday, November 30, 2018

தமிழ்நாடு தொழிலாளர் துறையில் வேலை



சென்னை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஆட்சி எல்லையில் காலியாக உள்ள 21 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை, கூடுதல் தொழிலாளர் ஆணையரால் நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 21 

பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சிறப்பு தகுதி: மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 + 50,000 என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் 

வயதுவரம்பு: 01.07.2018 அன்று 18 வயது பூர்த்தி அடைந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். பட்டதாரிகளுக்கு வயதுவரம்பில் உச்ச வயது வரம்பு இல்லை. 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள்: இப்பணிக்கான விண்ணப்பங்களை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) அலுவலகங்களிலும், சென்னை மற்றும் வேலூர், தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகங்களிலும் மற்றும் சென்னை, தொழிலாளர் கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் நேரிலும் சமர்ப்பிக்கலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், 
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியக் கட்டிடம், 
6வது தளம், டி.எம்.எஸ். வளாகம், 
சென்னை - 600 006. 
தொலைபேசி 044 2433 9934

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.12.2018 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலும் சமர்ப்பிக்கலாம்.

விவரங்கள் அறிய Click Here  அல்லது  click here


பட்டதாரிகளுக்கு ஏர் இந்தியாவில் செக்யூரிட்டி ஏஜென்ட் வேலை


ஏர் இந்தியா ஏர் போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 63 செக்யூரிட்டி ஏஜென்ட் பணிக்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 63 (ஆண்கள்-53, பெண்கள்-10) 

பதவி: Security Agents 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று தீயணைப்பு மற்றும் பேரீடர் மேலாண்மை மையத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: பொது பிரிவினர் 28 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.20.190

தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 
Play Ground, Residential Complex, 
New Quarters, 
Airport Authority of India, 
1 no. Airport
Gate (VIP Road), 
Dum Dum, Kolkata-700 052.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.12.2018

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை கொல்கத்தாவில் மாற்றத்தக்க வலையில் “AIR INDIA LTD” என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். டி.டி.யின் பின்புறம் பெயர், பிறந்த தேதி, செல்போன் எண்ணை எழுத வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி, தேவையான சான்றிதழ்களின் நகல்களில் அட்டெஸ்ட் செய்து அதனுடன் அசல் சான்றிதழ்கள் இணைத்து நேர்முகத்தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். 
 
விவரங்கள் அறிய  Click Here

ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியிடம் உள்பட ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பிப்பதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது.

புதன்கிழமையுடன் (நவ. 28) தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புயல் பாதிப்பு காரணமாக விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், வரைவாளர் மூன்றாம் நிலை ஆகிய காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த புதன்கிழமை கடைசி நாளாகவும், தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை அலுவலர் உதவி இயக்குநர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க நவம்பர் 21-ஆம் தேதியும், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நிலை எண் 3 மற்றும் 4 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 3-ஆம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கஜா புயல் மற்றும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களின் நலன்கள் கருத்தில் கொள்ளப்பட்டது. 

இதையடுத்து, ஐந்து பதவிகளிலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 10 ஆகும். தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 12-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நீட்டிக்கப்பட்ட போதிலும், தேர்வுகள் நடைபெறும் நாள்களில் மாற்றம் ஏதுமில்லை என்று டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Tuesday, November 27, 2018

முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் (27.11.2018) முதல் விண்ணப்பிக்கலாம்

சைதை துரைசாமியின் மனிதநேய மையம் க்கான பட முடிவு


சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்று முதல் விண்ணப்பிக்கலாம். சைதை துரைசாமியின் மனிதநேய மையம் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இதுபோன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 226 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு பணிகளில் சேர்ந்து உள்ளனர். இந்தநிலையில், கடந்த 11-ந் தேதி நடைபெற்ற குரூப்-2 முதல்நிலை தேர்வுகளுக்கு கடந்த மே மாதம் தொடங்கி 5 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 

இந்த தேர்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, குரூப்-2 முதன்மை தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மனிதநேய மையம் சார்பில் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்பில் கடந்த 6 மாத காலமாக முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் அந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர்களுக்கும், அவர்களது வேண்டுகோளை ஏற்று வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 11-ந் தேதி நடைபெற்ற முதல்நிலை தேர்வில் தெரிய வந்துள்ள கட்-ஆப் மதிப்பெண்களில் 140 மற்றும் அதற்கு மேல் எடுத்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளும் 150 மற்றும் அதற்கு மேல் எடுத்துள்ள பொதுப்பிரிவினரும் இப்பயிற்சிக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். 

டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ள இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் www.mnt-f-r-e-e-ias.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்நிலைத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் நேரில் வந்தோ பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 24358373, 24330095 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மாதிரி தேர்வுகள், வகுப்புகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கு விமான சரக்கு பெட்டக நிறுவனத்தில் வேலை


இந்திய விமான ஆணைய நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனங்களில் ஒன்றான ஏஏஐ கிளாஸ் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 372 Security Screeners பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Security Screeners

காலியிடங்கள்: 372

ஒவ்வொரு விமான தளங்களிலும் உள்ள காலியிடங்கள் விவரம்:

1. Madurai - 32
2. Tirupati - 20
3. Raipur - 20
4. Udaipur - 20
5. Ranchi - 20
6. Vadodara - 20
7. Indore - 38
8. Amritsar - 52
9. Mangalore - 38
10. Bhubaneswar - 38
11. Agartala - 22
12. Port Blair - 22
13. Chandigarh - 30

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அத்துடன் என்.சி.சி. சான்றிதழ் அல்லது விமான நிறுவனத்தின் ஏவி.எஸ்.இ.சி. சான்றிதழ் பெற்றிருப்பதுடன் இந்தி, ஆங்கிலம் மொழி அறிவுடன் உள்ளூர் மொழியும் தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு சில பணியிடங்களுக்கு மட்டும் உடற்தகுதி, எழுத்துத் தேர்வும் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர், பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தபால் முலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் The Chief Executive Officer, AAI Cargo Logistics & Allied Services Company Limited, AAI Complex, Delhi Flying Club Road, Safdarjung Airport, New Delhi -110 003  என்ற முகவரிக்கு சென்றடைய வேண்டும். 

விண்ணப்பம் சென்றுசேர கடைசி தேதி: 15.12.2018

விவரங்கள் அறிய Click Here


Monday, November 26, 2018

தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி மையத்தில் ஜூனியர் நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணி.

தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி மையம் க்கான பட முடிவு


தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி மையம் சுருக்கமாக என்.ஏ.ஆர்.ஐ. என அழைக்கப்படுகிறது. புனேயில் செயல்படும் இந்த மருத்துவ மையத்தில் ஜூனியர் நர்ஸ், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. 18 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. டிப்ளமோ நர்சிங் மற்றும் பி.எஸ்சி. நர்சிங் படித்தவர்கள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ரூ.300க்கு டி.டி. எடுத்து இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. நேர்காணலின் போது எழுத்துத் தேர்வு மற்றும் தனிநபர் நேர்காணல் நடத்தப்படுகிறது. 30-11-2018 மற்றும் 4-12-2018 ஆகிய தேதிகளில் இதற்கான தேர்வுமுறைகள் நடக்கிறது. இது பற்றிய விவரங்களை http://www.nari-icmr.res.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

கணினி தமிழ் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ் விருது க்கான பட முடிவு

முதல்வர் கணினி தமிழ் விருதுக்கான விண்ணப்பங்கள், டிச., 31க்குள் வந்தடைய வேண்டும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ் வளர்ச்சி கருதி, தமிழ் மொழியை கம்ப்யூட்டரில், அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோருக்கு, 2013 முதல், 'முதல்வர் கணினி தமிழ் விருது' வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப்பதக்கம் மற் றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து, தமிழ் மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டிக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள், 2015, 2016, 2017ல் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விருதுக்கான விண்ணப்பம், தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு, டிச., 31க்குள் வந்தடைய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆடை உற்பத்தி இலவச பயிற்சி, கிராமப்புற இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!

தொடர்புடைய படம்

தமிழகம் முழுவதும், 23 மாவட்டங்களில், கிராமப்புற இளைஞர்களுக்கு, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரி சார்பில், ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தீன்தயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தில், கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 

அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில், திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, பெரம்பலுார், கடலுார், அரியலுார், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி உட்பட, 23 மாவட்டங்களைச்சேர்ந்த, 2,500 இளைஞர்களை தேர்வு செய்து, ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி அளிக்க, திருப்பூர் நிப்ட்--டீ கல்லுாரியில், 2 மையம்; அம்மாபாளையம், வீரபாண்டி பகுதிகளில் தலா ஒன்று; மதுரையில் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒன்று என, மொத்தம், ஐந்து பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் டிச., மாதம் முதல், பயிற்சி துவங்குகிறது.

ஓவன் ஆடை உற்பத்தி டெய்லர், பின்னலாடை டெய்லர், செக்கிங், உற்பத்தி மேற்பார்வையாளர், மெர்ச்சன்டைசர், பேஷன் டிசைனர், தர கட்டுப்பாடு நிர்வாகி என, ஏழுவகை பயிற்சிகள் அளிக்க உள்ளனர்.

இது குறித்து, நிப்ட்-- டீ கல்லுாரி திறன் மேம்பாட்டு துறை தலைவர் சிவஞானம் கூறியதாவது:கிராமப்புற இளைஞர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன், ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. ஏழுவகை பயிற்சிகள் உள்ளன; இளைஞர்கள், கல்வித்தகுதி அடிப்படையில், ஏதேனும் ஒரு பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.இரண்டு ஆண்டுகளில், 2500 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது; முதல்கட்டமாக, 750 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில், பயிற்சி மையங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன.இத்திட்டத்தில், 4 முதல் 5 மாதம் வரை பயிற்சி அளிக்கப்படும் தங்குமிடம், உணவு இலவசம். போக்குவரத்து செலவும் திரும்ப வழங்கப்படும்.டெய்லர், செக்கிங் பயிற்சிக்கு, 5ம் வகுப்பு படித்திருந்தால் போதும். பேஷன் டிசைனருக்கு, பிளஸ்2 படித்திருக்க வேண்டும். 

பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், குடும்பத்தில் யாரேனும் ஒருவர் சுய உதவிக்குழுவில் இருந்தாலோ அல்லது, நுாறுநாள் வேலை வாய்ப்பு திட்ட பயனாளியாக இருந்தால், மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதில், இணைய விருப்பம் உள்ளோர், 97914 83111 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்

Tirunelveli Aavin milk Recruitment for Technician, Driver Job Posts

தொடர்புடைய படம்

Org Name
 Tirunelveli District Cooperative Milk Producers’ Union Ltd

Qualification
 8th,12th, Post graduate degree

Job Location
 Tirunelveli

Name of the Post 
Technician, Driver Post

Apply Mode
Postal

Address
“The General Manager , 
The Tirunelveli District Co-operative Milk Producers Union Ltd., 
Reddiarpatty Road, 
Perumalpuram Post, Tirunelveli – 627 007”

Last date
 12/12/2018

Official Notification of Aavin Milk website
↓ 


TNPSC Recruitment 2018 41 AE (Industries) Posts

தொடர்புடைய படம்

Organization Name
Tamil Nadu Public Service Commission

Job Category 
Tamilnadu Govt Jobs

No. of Posts
41 Vacancies

Name of the Posts
Assistant Engineer (Industries), Principal & Various Posts

Qualification
BE.,B-TECH

Selection Procedure 
Written Examination, Interview

Apply Mode 
Online

Official Website 

Starting Date 
26.11.2018

Last Date 
24.12.2018

Online Application & Official Notification Links
Official Website Career Page 
 Notification PDF 
Online Application Form 

Saturday, November 24, 2018

Indian Air Force Tirunelveli Rally Recruitment 2018

Indian Air Force க்கான பட முடிவு

Organization Name
 Indian Air Force

Job Category
 Central Govt Jobs

No. of Posts
 Vacancies

Name of the Posts
Airmen in Group “Y” (Non-Technical) & Various Posts

Job Location
All Over India

Selection Procedure
Written Test,
 Adaptability Test1,
 Adaptability Test2
 Dynamic Factor Test (DFT)

Apply Mode
Offline

Official Website

Rally important Dates
09 December 2018 to 12 December 2

Offline Application & Official Notification Links
 Official Website Career Page
Official Notification PDF 

BEL Chennai Recruitment 2018 (16 Contract Engineer Posts)

தொடர்புடைய படம்

Organization Name
Bharat Electronics Limited 

Job Category 
Central Govt Jobs 

No. of Posts 
16 Vacancies 

Name of Posts 
Contract Engineer Posts 

Qualification
B.E./B.TECH

Job Location 
Chennai (Tamil Nadu) 

Selection 
Written Exam, Interview 

Apply Mode 
Online 

Website 

Starting Date 
22.11.2018 

Last Date 
12.12.2018 

Online Application & Official Notification Links
BEL Official Website Career Page
BEL Official Notification PDF 
BEL Online Application Form 

TN Labour Department Recruitment 2018 (21 Office Assistant Posts)

Tamilnadu Labour Department க்கான பட முடிவு

Organization Name
Tamilnadu Labour Department
Job Category
Tamilnadu Govt Jobs
No. of Posts
21 Vacancies
 Name of Posts
Office Assistant & Various Posts
Job Location
Tamilnadu
Selection
Short Listing, Interview
Apply Mode
Offline
Website
Starting Date
14.11.2018
Last Date
17.12.2018


Offline Application & Official Notification Links:
Website Page Click Here
Application Form Click Here

Friday, November 23, 2018

ரூ.35-க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் சேவை துண்டிப்பு - ஏர்டெல், வோடோபோன் அறிவிப்பு

ஏர்டெல், வோடோபோன் நிறுவனம் எடுத்துள்ளது. க்கான பட முடிவு

குறைந்தபட்ச தொகையான ரூ.35-க்குமொபைல் ரீசார்ஜ் மேற்கொள்ளவில்லை என்றால் சேவையை துண்டிக்கும் முடிவை ஏர்டெல், வோடோபோன் நிறுவனம் எடுத்துள்ளது.

ஜியோ நிறுவனம் வழங்கும் அதிரடி சலுகைகளால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்துவதில்லை. இதனால் ஏற்படும் பெரும் வருமான இழப்பை தடுக்க, இந்த திட்டத்தை ஏர்டெல், வோடோபோன் நிறுவனம் அமல்படுத்த உள்ளது. குறைந்தபட்ச தொகையான 35 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்யவில்லை என்றால், இனி இன்காமிங் கால் வசதியும் இருக்காது.இதனால் 20 கோடி வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பி.எஸ்சி., நர்சிங் படிப்பு விண்ணப்பிக்க வாய்ப்பு

பி.எஸ்சி., நர்சிங் படிப்பு க்கான பட முடிவு

'தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ள, பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு, 11 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. இதில், அரசு ஒதுக்கீட்டில், 900 இடங்கள் காலியாக உள்ளன. இதனால், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்காதோர், புதியதாக விண்ணப்பிக்கலாம் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர், செல்வராஜன் வெளியிட்ட செய்தி குறிப்பு: பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு இதுவரை விண்ணப்பிக்காத, தகுதி வாய்ந்தோர், www.tnhealth.org, www.tnmedicalselection.net என்ற இணையளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களுடன், 29ம் தேதி, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் கவுன்சிலிங்கில், நேரடியாக பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை க்கான பட முடிவு

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Chief Controller, Manager (Civil UG), Architectural Expert பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 06


பதவி: Assistant Chief Controller, Manager (Civil UG), Architectural Expert 
1. Architectural Expert - 02
2. Manager (Civil UG) - 01 
3. Assistant Chief Controller - 03 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள், பட்டம், கட்டிடக்கலை பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறைந்தது 15 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 21.11.2018 தேதியின்படி ஒவ்வொரு பதவிக்கும் முறையே 50, 38, 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 
CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT,
ADMIN BUILDING, 
POONAMALLEE HIGH ROAD, 
KOYAMBEDU, 
CHENNAI - 600 107.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 08.12.2018

விவரங்கள் அறிய Click Here

வனத் துறை பணியிடங்களுக்கான தேர்வு: டிச. 6 முதல் 11 வரை நடைபெறுகிறது






தமிழக வனத் துறை க்கான பட முடிவு

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் டிசம்பர் 6 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 300 வனவர், 726 வனக் காப்பாளர்கள், 152 ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் என மொத்தம் 1,178 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் தேர்வுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 25), வெள்ளிக்கிழமை (நவ. 30) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கஜா புயல் காரணமாக இந்தத் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

மறு தேர்வு குறித்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கஜா புயல் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட வனத் துறை பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வு வரும் டிசம்பர் 6 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், வனவர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கு டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலும், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கு டிசம்பர் 10, 11 ஆகிய இரண்டு நாள்களிலும் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறும்.

Thursday, November 22, 2018

பி.எச்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை


பிஎச்.டி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-19-ஆம் கல்வியாண்டில் பிஎச்.டி பட்டம் பயின்றுவரும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த 1, 2-ஏ, 3-ஏ, 3-பி, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மாத கல்வி உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டுவருகிறது.

இந்தத் திட்டத்தில் பயன்பெறவிரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தத் துறையிடம் இருந்து ஏற்கெனவே ஆராய்ச்சிப் படிப்புக்காக கல்வி உதவித்தொகை பெற தகுதிப்படைத்த, நிகழ் கல்வியாண்டில் பிஎச்.டி பட்டப்படிப்பை தொடர தகுதி பெற்றுள்ள மாணவர்கள் 2018-19-ஆம் கல்வியாண்டில் பிஎச்.டி படிப்பில் சேர விண்ணப்பங்களை செலுத்தலாம். 

விண்ணப்பங்களை w‌w‌w.​b​a​c‌k‌w​a‌r‌d​c‌l​a‌s‌s‌e‌s.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் நவ.30-ஆம் தேதிக்குள் பதிவிடலாம். மேலும் விவரங்களுக்கு 8050770004 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.எம்.எம்.எஸ். தேர்வு: நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு

nmms க்கான பட முடிவு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வுகளுக்கு (என்.எம்.எம்.எஸ்.,) விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 

எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான என்.எம்.எம்.எஸ். தேர்வு வரும் டிச.1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

எனவே, பள்ளி தலைமையாசிரியர்கள் தங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள யூஸர் ஐ.டி, பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி நுழைவுச் சீட்டுகளை நவ.22 வியாழக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

கடலோர காவல்படை க்கான பட முடிவு

இந்திய கடலோர காவல்படையில் ‘குரூப்-ஏ’ பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரி தரத்திலான உதவி கமாண்டன்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: உதவி கமாண்டன்ட்

வயது வரம்பு: ஜெனரல் டியூட்டி (ஆண் - பெண்) விண்ணப்பதாரர்கள் 1.7.1994 மற்றும் 30.6.1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர் களாக இருக்க வேண்டும். ஜெனரல் டியூட்டி பைலட் மற்றும் கமர்சியல் பைலட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 1.7.1994 மற்றும் 30.6.2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி (ஆண்-பெண்) மற்றும் ஜெனரல் டியூட்டி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ் டூ படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். படிப்பை இடைவெளியின்றி அதாவது 10+2+3 முறையில் முடித்தவராக இருக்க வேண்டும்.

12-ம் வகுப்பில் இயற்பியல் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நுண்ணறிவுத் திறன் தேர்வு, உளவியல் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்து பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் http://joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2018

குரூப் 2 தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை: 9 கருணை மதிப்பெண்கள் வழங்க டிஎன்பிஎஸ்சி உத்தரவு

tnpsc க்கான பட முடிவு

குரூப்-2 தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை விவகாரத்தில், தவறான கேள்விகளுக்காக 9 மதிப்பெண்கள் வழங்க வல்லுநர் குழுவிற்கு டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.


தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்புத் துறை இளநிலை அலுவலர், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் என 1,199 பணியிடங்களுக்கான காலியாக உள்ளன. அப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-2 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் பதவிக்கான போட்டித் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, குரூப்- 2 முதல்நிலைத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.11) ஆம் தேதி நடைபெற்றது.

நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு வினாத்தாளில், திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் எது சரியான பதில் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 

இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் எது தந்தை பெரியாரின் பெயர் தவறாகவும், நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தந்தை பெரியார் அவமதிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அப்படிப்பட்ட பெரியாருக்கு சாதி அடையாளம் சூட்டுவதும், அதுவும் அரசுத்தேர்வில் அடையாளப்படுத்துவதும் அயோக்கியத்தனமானது மட்டுமல்ல; தேர்வு எழுதுவோரின் மனதில் பிற்போக்குத் தனமான எண்ணத்தை விதைப்பதுமாகும். இதற்கு, காரணமானவர்களைப் பணிநீக்கம் செய்யவேண்டும். தமிழக அரசு இந்த அடாத செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். 

இதுபோன்று 6 கேள்விகளுக்கு தவறான விடை கேட்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியியானது.

இதையடுத்து குரூப் 2 தேர்வில் பெரியாரின் சாதி பெயரை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், குரூப் 2 தேர்வில் தவறான விடை கொடுக்கப்பட்டிருந்த 6 கேள்விகளுக்கு, ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் என்ற கணக்கில் 9 மதிப்பெண்கள் வழங்க வல்லுநர் குழுவிற்கு டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.

TNPSC - புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தொடர்புடைய படம்

கஜா புயல் பாதிப்பு மற்றும் தொடர் மழை காரணமாக சனிக்கிழமையன்று (நவ.24) நடைபெற இருந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கஜா புயல் பாதிப்பு, தொடர் மழை காரணமாக சனிக்கிழமை நடத்தப்பட இருந்த புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் கூட்டுறவு சங்கங்களுக்கான இளநிலை ஆய்வாளர் பதவிக்கு நவம்பர் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் இப்போது நவம்பர் 28 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாளும் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Wednesday, November 21, 2018

PARAGON POOLED OFF CAMPUS DRIVE

off campus க்கான பட முடிவு

Company Name: PARAGON 

Post Name: Software Engineer

Qualification: 
- B.E / B.TECH (CSE, IT, ECE, EEE)ME.MCA
- 75% and above in 10th, 12th and UG
- No standing arrears

Candidate Information:
Candidates must carry the following for the recruitment process
- 2 Recent Photographs, Resume (max of 2 pages), all academic mark sheets & certificates (original & 1 photocopy) for verification.
- Candidates must carry 1 photocopy of their PAN Card, Aadhaar Card & Passport (front & back page) (If available).
Advertisements

Selection Procedure:
Online Aptitude test
Technical Interview
HR Round

Experience: Freshers (2018 Batch).,2017

Last Date for Registration: 21.11.2018


Walk in Date: 24th & 25th NOV 2018

College Address and Venue:
Knowledge Institute of Technology,
Knowledge Business School Salem,
Training and Placement Cell,
KIOT Campus, Kakapalayam (Po),
Salem- 637504.

Contact Persons: Prof. D. Sabarish, Prof. K. Rathina Kumar, Prof. B. Dhinesh

Contact Numbers: 99432 82481,78670 58600,86084 85944

Registration Link: Click Here

Procedure for Participation In the Recruitment Drive:-
1. No Registration fee.
2. Eligible candidates are requested to register in our website www.kiot.ac.in on or before 21.11.2018.
3. The last date for registration is on 21.11.2018.
4. The shortlisted candidates will be intimated through E-mail on 22.11.2018.
5. The candidates are instructed to bring their 2 copies of Resume, 4 copies of passport size photograph and photocopies of Mark sheets while attending the interview process. The Candidates should be present at KIOT campus on 24.11.2018 at 8.30 am