Sunday, August 12, 2018

ஆராய்ச்சிப் படிப்பு: சிறுபான்மையினருக்கு உதவித் தொகை: தமிழக அரசு அறிவிப்பு

ஆராய்ச்சிப் படிப்பு க்கான பட முடிவு

சிறுபான்மையினர் ஆராய்ச்சிப் படிப்பு வரை படிக்க கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து, அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
ஒன்று முதல் 10 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ -மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகையும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பயில்வோருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் அளிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை www.scholarship.gov.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் அளிக்கலாம்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களையும் இணையதளத்தின் வாயிலாகவே அறிந்து கொள்ளலாம்.  தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாக செப்டம்பர் 30 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment