Wednesday, August 8, 2018

10-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் க்கான பட முடிவு

 திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு நடத்தப்பட இருக்கிறது. முகாமில் முக்கிய தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான ஆள்களைத் தேர்வு செய்யவும் உள்ளன. எனவே இம்முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்று, வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம். இதில், பங்கேற்க விரும்புவோர் குறிப்பிட்ட நாளில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்துக்கு வந்து விட வேண்டும். இதில் பங்கேற்று, பணி நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது

No comments:

Post a Comment