Saturday, July 21, 2018

5 கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு- அட்டவணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

Related image

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்றுவெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 25-ம்தேதி தொடங்கி 5 கட்டங்களாக கலந்தாய்வுநடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு என ஏற்படுத்தப்பட்ட மையங்களில் சென்று மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

முதற்கட்டமாக 190 மதிப்பெண்கள் வரைபெற்ற மாணவர்களுக்கு வரும் 25ம் தேதி முதல் முதல் 29-ம் தேதி வரை கலந்தாய்வுநடைபெறுகிறது. இதில் பங்கேற்கும்மாணவர்கள் இன்று முதல் 24-ம் தேதிவரை ஆன்லைனில் கட்டணம்செலுத்தலாம்.

இதேபோல் 175 மதிப்பெண்கள் வரைபெற்ற மாணவர்களுக்கு வரும் 30-ம்தேதி தொடங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி வரைகலந்தாய்வு நடைபெறும். இதில்பங்கேற்க தகுதி வாய்ந்த மாணவர்கள் வரும் 25-ம் தேதி முதல் கட்டணம்செலுத்தலாம்.

150 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்குஆகஸ்ட் 4ம் தேதி முதல் 8-ம் தேதிவரையிலும் கலந்தாய்வு நடைபெறும்.வரும் 30-ம் தேதி முதல் ஆன்லைனில்கட்டணம் செலுத்தலாம். இதேபோல் 125மதிப்பெண்கள் வரை பெற்றமாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் 13ம்தேதி வரையில் கலந்தாய்வு நடக்கிறது.இவர்கள் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல்ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம்.இதர மாணவர்களுக்கு ஆகஸ்ட் 14 முதல்19-ம் தேதி வரை கலந்தாய்வுநடைபெறுகிறது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல்கட்டணம் செலுத்தலாம். கலந்தாய்வு குறித்த மேலும்விவரங்களை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்

No comments:

Post a Comment