.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை – 600 003 செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அறிக்கை எண்.6/2018, நாள் 01.03.2018-ன் படி அறிவிக்கப்பட்ட 147 துறைத் தேர்வுகளை, கடந்த 24.05.2018 முதல் 31.05.2018 வரை, கொள்குறி வகை, விவரித்து எழுதுதல், கொள்குறி வகை மற்றும் விவரித்து எழுதுதல் என்ற புதிய பாடத்திட்டத்தின் படி தூத்துக்குடி மாவட்டம் நீங்கலாக சென்னை உட்பட 31 மாவட்ட தேர்வு மையங்களில் நடத்தி முடித்துள்ளது. மேற்படி துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது. இது போன்று துறைத்தேர்வின் உத்தேச விடைகளை இணையதளத்தில் வெளியிடுவது இதுவே முதன் முறையாகும். துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள், அவரவர் எழுதிய கொள்குறி வகைத் தேர்வின் விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வின் உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு, பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்ப`தாரர் கூறும் விடை போன்ற தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு, விரைவு தபால் மூலமாகவோ (அ) contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பதாரர் தங்களுடைய மனுக்களை அனுப்பலாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் CLICK
No comments:
Post a Comment