Tuesday, June 26, 2018

புகைப்பட போட்டி: அஞ்சல் துறை அறிவிப்பு

Image result for புகைப்பட போட்டி

சென்னை: சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், அஞ்சல் துறை, 'இந்திய விடுமுறை இடங்கள்' என்ற தலைப்பில், புகைப்பட போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இந்த போட்டியில், விடுமுறை நாட்களில் பொதுமக்கள் செல்லும் இடங்களை, கலை நயத்துடன் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். புகைப்படங்கள், 5, எம்.பி., அளவிற்கு குறையாமல், www.mygov.in எனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவற்றுடன், பெயர், வயது, பாலினம், நாடு, முகவரி, அலைபேசி எண், இ - மெயில் முகவரி, புகைப்படம் எடுத்த தேதி, இடம், புகைப்படம் எடுத்த கேமரா உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.போட்டிக்கு தேர்வாகும் புகைப்படங்கள், அஞ்சல் தலைகளாக வெளியிடப்படும். ஜூலை, 10க்குள், 'அஞ்சல் தலை பாதுகாப்பு மையம், கூடுதல் பொது இயக்குனர், அறை எண், 108, தேக்பவன், பாராளுமன்ற சாலை, புதுடில்லி - 110 001' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விரைவுத் தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். உரையின் மேல், 'சுதந்திர தினம், 2018 - புகைப்பட போட்டி' என, இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment