ரயில்வே பணியாளர் தேர்வை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்தான கருத்தரங்கம், திருப்பூரில் நாளை நடக்கிறது.
ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால், 4,216 பெண் போலீசார் உட்பட, 8,619 கான்ஸ்டபிள் பணியிடங்கள் மற்றும் 1,126 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, படிக்க வேண்டிய பாட புத்தகங்கள், தேர்வை எதிர்கொள்ளும் முறை குறித்த கருத்தரங்கம், நாளை (26ம் தேதி), காலை, 10:30க்கு நடக்கிறது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும், கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறுமாறு, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது
No comments:
Post a Comment