Friday, June 8, 2018

தூய்மையை வலியுறுத்தி சென்னையில் ஜூன் 24ல் மாரத்தான் ஓட்டம்

Image result for மாரத்தான் ஓட்டம்

சுற்றுச்சூழல் தூய்மையை வலியுறுத்தும் வகையில் சென்னையில் ஜூன் 24ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து ஜியோ பவுண்டேஷன் நிறுவனர் பிரியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை நகரில் தூய்மையை வலியுறுத்தியும், தூய்மையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக ‘நம்ம ஊரு ரொம்ப கிளீன்’ என்ற பெயரில் அம்பத்தூர் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூய்மை செய்யும் பணிகளை தொடர்கிறோம். பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவமனைகளையும் தூய்மை செய்ய உள்ளோம். 

மரக்கன்றுகளையும் நடுவோம். தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ பவுண்டேஷன் சார்பில் சென்னையில் ஜூன் 24ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடைபெறும். பெசன்ட் நகரில் உள்ள ஆல்காட் நினைவுப் பள்ளியில் காலை 5.30 மணிக்கு தொடங்கி 10கிமீ தொலைவுக்கு இந்த பந்தயம் நடைபெறும். பங்கேற்க விரும்புவோர் தலா ரூ.500 செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த மாரத்தான் ஓட்டம் முன்னோட்டம் தான். வரும் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி கொட்டிவாக்கத்தில் உள்ள ஓஎம்ஆர்-ஓய்எம்சிஏ திடலில் அரை மாரத்தான் (10 கி.மீ) நடைபெறும். அதுவரை எங்கள் தூய்மை பணிகள் சென்னை மாநகராட்சி ஒத்துழைப்புடன் நடைபெறும்.

No comments:

Post a Comment