Tuesday, May 15, 2018

பிளஸ் 2 தேர்வு முடிவு (16.05.2018) வெளியீடு.



சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத் துறையின் தலைமை அலுவலகத்தில் இயக்குநர் தண்.வசுந்தராதேவி 16.5.18 காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.

தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சிறிது நேரத்தில் மாணவ, மாணவிகளின் செல் போன் எண்ணுக்கு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

மாணவ, மாணவிகள் கீழ்க்கண்ட இணையதளங்களில் தங் கள் பதிவு எண், பிறந்த தேதி யைக் குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம். 

        
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

பிளஸ்2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21ம் தேதி வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மே 21ம் தேதி பள்ளிகளில் நேரடியாகவும், பிற்பகலில் இணையதளம் மூலமாகவும் தற்காலிசான்று பெறலாம் என்வும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment